எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், மறைமலைநகர், மாநில ஊரக வளர்ச்சி பயிற்சி மையத்தில், தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை முகமை சார்பாக, 32 பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மை பணியினை திறம்பட மேற்கொள்வதற்காக நேற்று (16.4.2015) நடைபெற்ற மூன்று நாட்கள் பயிற்சியினை கூடுதல் தலைமை செயலாளர்ஃவருவாய் நிர்வாக ஆணையரும், தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை முகமையின் தலைவருமான முனைவர்.டி.எஸ்.ஸ்ரீதர் தலைமையில், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.வே.க.சண்முகம் முன்னிலையில், வருவாய்த்துறை அமைச்சர் .ஆர்.பி.உதயகுமார் குத்து விளக்கேற்றி தொடங்கிவைத்து பேசியதாவது,
“ மக்களின் முதல்வர் அம்மா அவர்களின் வழிகாட்டுதலின்படி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பேரிடர் மேலாண்மை பணியினை திறம்பட மேற்கொள்வதற்காக, மாவட்டங்களில் பேரிடர் மேலாண்மை பிரிவு ஒன்றினை ஏற்படுத்தியும், 32 வட்டாட்சியர்கள் (பேரிடர் மேலாண்மை) பணியிடங்கள் உருவாக்கியும் தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது. இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டுள்ள அனைத்து வட்டாட்சியர்களும் முழு மனதோடும், முழு அளவோடும் செயலில் பணியாற்ற வேண்டும். எப்போது வேண்டுமானாலும் போர் வரும், வராமலும் போகும், ஆனாலும், இராணுவத்திற்கு முதலாவதாக அதிக நிதி இந்திய அரசு வழங்கி வருகிறது. அதுபோல் சூறாவளி, வெள்ளம், சுனாமி, நிலநடுக்கம், தீ, நிலச்சரிவு போன்ற பல்வேறு பேரிடர்கள் எப்போது வேண்டுமானாலும் வரும், அல்லது வராமலும் இருக்கும். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் சுனாமி பாதிப்பு ஏற்பட்ட போது, அம்மா அவர்களது அரசு மிகச் சிறப்பாக மீட்பு பணியில் செயல்பட்டது. உலக நாடுகள் வியக்கும் வகையிலும், வழிகாட்டியாகவும் தமிழகத்தில் சுனாமி தாக்குதல் மீட்பு பணி நடைபெற்றது.
இதனை கருத்தில் கொண்டு அம்மா அவர்களது அரசு பேரிடர் காலங்களில் தயார் நிலையில் எப்போதும் இருப்பதற்காக வருவாய்த்துறையின் கீழ் ஒரு தனி துறையாக பேரிடர் மேலாண்மை துறை உருவாக்கப்பட்டு தற்போது மாவட்டங்கிளல் 32 வட்டாட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இப்பயிற்சி வகுப்பில் எல்லாவிதமான பேரிடர் காலங்களிலும் எப்போதும் நாம் முன்னெச்சரிக்கையாக இருப்பதற்கு பல்வேறு விதமான பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சி முடித்தவுடன் அந்தந்த மாவட்டங்களில் உள்ளவர்களுக்கு நீங்கள் பயிற்சி அளிக்க வேண்டும். எப்போது பேரிடர் வந்தாலும் அக்காலங்களில் தமிழகம் முதன்மை மாநிலமாக செயல்படுதல் வேண்டும். அதற்காக தான் இப்பயிற்சி உங்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வருகிறது. இந்த பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் பணி புதிதாக உருவாக்கப்பட்டு நீங்கள் இப்பணியில் முதல் முறையாக பணியாற்றி வருகிறீர்கள்.
இப்பணியில் நீங்கள் செல்லுகின்ற இடத்தில், முழு அற்பணிப்புடனும், தயார் நிலையில் இருந்தாலும் பொதுமக்கள் தயார் நிலையில் இருப்பதில்லை. மேலும், நாம் களத்திற்கு செல்லும் போது பல்வேறு மனநிலையில் உள்ள மக்களை சந்திக்க நேரிடும், அப்போது நாம் மக்களுக்கு ஏற்றவாரு அந்த நேரத்தில் செயல்பட வேண்டும். காஞ்சிபரம் மாவட்டத்தில் கடந்த வருடம் மௌலிவாக்கம் கட்டடம் இடிந்து பல்வேறு மக்கள் உயிரிழந்தனர். அப்போது மாண்புமிகு அம்மா அவர்களின் வழிகாட்டுதலின்படி அரசு அலுவலர்கள், பணியாளர்கள் இரவும், பகலும் தங்களை மறந்து மீட்பு பணியில் முழுமையாக ஈடுபட்டனர்.
பேரிடர் மேலாண்மை என்பது திட்டமிடல், ஒருமுகப்படுத்துதல் மற்றம் நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகளை தொடர்ச்சியாக ஒருங்கிணைக்கும் ஒரு செயலாகும். பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர்களின் பணியானது, மாவட்டத்தில் பேரிடர் மேலாண்மை தொடர்பான பணிகளை செயல்படுத்துதல், மாவட்ட அவசர கால கட்டுப்பாட்டு மையத்தினை நிர்வகித்தல். மாவட்ட பேரிடர் மேலாண்மை திட்டத்தினை தயார் செய்தல். 13-வது நிதிக்குழு ஒதுக்கீடு தொகையை பயன்படுத்துதல். மாவட்டத்திலிருந்து மாநில நிவாரண ஆணையருக்கு பேரிடர் நிவாரணம் குறித்த பிரேரணைகளை அனுப்புதல். பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண்ம வழங்குதல் மற்றும் பயனீட்டு சான்று சமர்ப்பித்தல். வருவாய் மற்றும் பிறதுறை அலுவலர்களுக்கு பேரிடர் மேலாண்மை குறித்த பயிற்சிக்கு ஏற்பாடு செய்தல். பாதிப்பிற்கு இலக்காகும் சமூகத்தினருக்கு பேரிடர் தயார் நிலை குறித்து பயிற்சியளித்தல். மாநிலகணக்காயரின் தணிக்கை மற்றம் அது தொடர்பான பணிகள் மற்றும் பேரிடர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளுதல் ஆகும்.
மேலும், இந்த மூன்று நாட்கள் பயிற்சியில், பேரிடர் மேலாண்மையின் அடிப்படைகள், பேரிடர் அடிப்படையில் தமிழ்நாட்டின் அமைப்பு குறித்த விளக்கம், பேரிடர் மேலாண்மை சட்டம் 2005 குறித்த விளக்கம். சமுதாய அடிப்படையிலான பேரிடர் மேலாண்மை திட்டத்தின் குறிக்கோள்கள். இந்திய பேரிடர் இணையதள வசதி. பல்வேறு பேரிடர்களை வீடியோ மூலம் தெளிவுபடுத்தல். தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை முகமையின் குறிக்கோள் மற்றும் பணிகள். மாவட்ட பேரிடர் மேலாண்மை மற்றும் வட்டாட்சியர் (பேரிடர் மேலாண்மை) பணிகள். மாவட்ட அளவில் கணக்குள் பராமரித்தல் ஆகும். இப்பயிற்சியின் ஒரு பகுதியாக வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலக கட்டுபாட்டில் இயங்கி வரும் மாநில அவசர கட்டுபாட்டு மையம், இந்திய வானிலை ஆய்வு மையம் மற்றும் சோழிங்கநல்லூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள பல்நோக்கு பேரிடர் பாதுகாப்பு மையம் மற்றும் முன்னெச்சரிக்கை கருவி அமைக்கப்பட்டுள்ள இடத்தை நேரில் பார்வையிடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மக்களுக்கு சேவை செய்யும் வருவாய்த்துறை மற்ற துறைகளுக்கு தாய் துறை ஆகும். இத்துறையின் கீழ் தற்போது பேரிடர் மேலாண்மை துறை செயல்பட்டு வருகிறது. உங்கள் பணி புனிதமான பணி, முக்கியமான பணி. விலை மதிக்க முடியாத மனித உயிர்களை காப்பாற்ற நீங்கள் சிறப்பாக பணியாற்ற வேண்டும்” என்றார்அமைச்சர் .ஆர்.பி.உதயகுமார் .
இந்நிகழ்ச்சியில், மாநில ஊரக வளர்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் .எல்.இராஜா, சென்னை பேரிடர் மேலாண்மை இணை இயக்குநர் .எஸ்.கந்தசாமி, வருவாய் கோட்டாட்சியர்கள் .ஆர்.பன்னீர்செல்வம் (செங்கல்பட்டு), மரு.டி.பரிதாபேகம் (தாம்பரம்) மற்றும் வட்டாட்சியர் (பேரிடர் மேலாண்மை) ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 5 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2024.
18 Apr 2024 -
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் திமுக கட்சினருக்கு திமுகத் தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் தெரிவித்ததாவது: