முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆக்ராவில் தேவாலயம் மீது தாக்குதல் மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

வியாழக்கிழமை, 16 ஏப்ரல் 2015      இந்தியா
Image Unavailable

ஆக்ரா, ஏப் 17:

ஆக்ராவில் தேவாலயம் மீது மர்ம நபர்கள் சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் தேவாலயத்தில் இருந்த சிலைகள் சேதமடைந்துள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து போலீசார் கூறும் போது, ஆக்ரா பிரதாப்புரா கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள புனித மேரி தேவாலயத்துக்குள் புகுந்த சில மர்ம ஆசாமிகள் தேவாலயத்துக்கு சேதம் விளைவித்துள்ளனர். மேலும் அங்கிருந்த 2 சிலைகளையும் சேதப்படுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக ராகாப்கஞ்ச் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் போலீஸ் உயர் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர் என தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து