முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிமுக நிர்வாகி மறைவுக்கு ஜெயலலிதா இரங்கல்

வியாழக்கிழமை, 16 ஏப்ரல் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை,ஏப்17
அதிமுக தலைமைக்கழக போட்டோ கிராபர் கே.ரூபன் தாயார்  வசந்தாள் மற்றும் ஆர்.எஸ் மங்கலம் அதிமுக நிர்வாகி அன்பு மறைவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் .ஜெயலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா நேற்று விடுத்துள்ளளஇரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது,தலைமைக்கழக போட்டோ கிராபர் கே.ரூபன் அவர்களுடைய தாயார் கே,வசந்தாள் உடல் நலக்குறைவால் மரணமடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றேன்.


தாயாரை இழந்து வாடும் ரூபனுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்கொள்வதுடன் அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற எலலாம் வல்ல இறைவனைப்பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அன்பு மறைவுக்கு இரங்கல் :ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ் மங்கலம் ஒன்றியம் அழகர் தேவன் மணக்குடி ஊராட்சிக்கழகச்செயலாளர் எஸ்.அன்பு கிளைக்கழகச்செயலாளர் ஏ.மணிமுத்து ஆகியோர் வாகனம் மூலம் ராமநாதபுரம் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த வாகனம் மோதியதில் மணிமுத்து சம்பவ இடத்திலேயே மரணமடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டும் அன்பு பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்ற செய்தி கேட்டும் மிகுந்த வருத்தமுற்றேன்.

என் உயிரினும் மேலான எனதருமை கழக உடன் பிறப்புகள் சாலைகளில் பயணம் செய்யும் போது மிகுந்த பாதுகாப்புடனும் எச்சரிகையுடனும் செல்ல வேண்டும் என்று நான் மீண்டும் வலியுறுத்திக் கேட்டுகொள்கிறேன். அன்பு சகோதரர் மணிமுத்தை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அன்பு விரைவில் பூரண நலம் பெற்று திரும்ப எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து