முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எழும்பூர்-நெல்லை இடையே சிறப்பு ரெயில்

வியாழக்கிழமை, 16 ஏப்ரல் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை எழும்பூர்-நெல்லை இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது..
இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக நெல்லை-சென்னை எழும்பூர் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. அதன் விவரம் வருமாறு:-நெல்லை-சென்னை எழும்பூர் சிறப்பு ரெயில்(வ.எண்: 06006), நெல்லையில் இருந்து வருகிற மே மாதம் 1-ந் தேதி(வெள்ளிக்கிழமை) இரவு 10.55 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 11.55 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.
மறுமார்க்கமாக சென்னை எழும்பூர்-நெல்லை சிறப்பு ரெயில்(06007) மே 2-ந் தேதி (சனிக்கிழமை) இரவு 10.45 மணிக்கு சென்னை எழும்பூரிலிருந்து புறப்பட்டு மறுநாள் பிற்பகல் 12.30 மணிக்கு நெல்லையை சென்றடையும்.

நெல்லை-சென்னை எழும்பூர் பிரீமியம் சிறப்பு ரெயில் (00603) மே மாதம் 3-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6.15 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 7.20 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.

சென்னை எழும்பூர்- நெல்லை சிறப்பு ரெயில் (வ.எண்.06008) எழும்பூரில் இருந்து மே 4-ந் தேதி (திங்கட்கிழமை) இரவு 10.45 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் பிற்பகல் 12.30 மணிக்கு நெல்லைக்கு செல்லும். நெல்லை-சென்னை எழும்பூர் சிறப்பு ரெயில்(06009), மே 10-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) மாலை 6.15 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு, அடுத்தநாள் காலை 7.20 மணிக்கு எழும்பூரை வந்தடையும்.

இதேபோல், மறுமார்க்கமாக சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில்(06010), மே 11-ந் தேதி(திங்கட்கிழமை) இரவு 10.45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் பிற்பகல் 12.30 மணிக்கு நெல்லையை சென்றடையும். இந்த ரெயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து