முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கனடா தாக்குதலில் பலியான இந்தியர்களுக்கு மோடி அஞ்சலி

வெள்ளிக்கிழமை, 17 ஏப்ரல் 2015      உலகம்
Image Unavailable

வான்கோவர், ஏப்.18-
கனடா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, 30 ஆண்டுகளுக்கு முன்பு விமான தாக்குதலில் பலியான இந்தியர்களின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். பிரதமர் மோடி பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளை தொடர்ந்து கனடாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கனடா நாட்டு பிரதமரை சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பின்போது, ரூ.16 ஆயிரம் கோடி மதிப்பில், இந்திய அணு உலைக்கு தேவையான யுரேனியத்தை கனடா வழங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும் கனடா நாட்டு தொழில் அதிபர்களை சந்தித்த மோடி, இந்தியாவில் தொழில் தொடங்க வருமாறு அவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.


இதையடுத்து, கனடா வாழ் இந்தியர்கள் டொரான்டோவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரமாண்ட கூட்டத்தில் கலந்து கொண்டு மோடி உரையாற்றினார். ஊழலற்ற இந்தியாவை உருவாக்குவதே தன்னுடைய முக்கிய குறிக்கோள் என்று அப்போது மோடி பேசினார். கடந்த 1985ம் ஆண்டு கனடா சென்ற ஏர் இந்தியா விமானம் வெடிகுண்டு தாக்குதலுக்கு உள்ளானதில் இந்தியாவை சேர்ந்த பலர் உயிரிழந்தனர். இதன் நினைவாக அமைக்கப்பட்டுள்ள கனிஷ்கா நினைவிடத்தில் பிரதமர் மோடி நேற்று முன்தினம் அஞ்சலி செலுத்தினார். அப்போது கனடா பிரதமர் ஹார்பரும் உடன் இருந்தார். இதையடுத்து வான்கோவரில் உள்ள குருத்வாராக்கு சென்று பிரதமர் மோடி வழிபாடு செய்தார்.


அங்குள்ள லஷ்மி நாராயண்கோவிலுக்கு சென்று சாமிதரிசனம் செய்தார். கோவிலுக்கு சென்ற மோடிக்கு அங்குள்ள இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். கனடா சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி நேற்று நாடு திரும்பினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து