எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேரணி நடத்திய காஷ்மீர் பிரிவினை வாதத்தலைவர் மஸ்ரத் ஆலம் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். பிரிவினை வாதத்தலைவர் செய்யது அலி கிலானி வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார்.
காஷ்மீரில் கடந்த 2நாட்களுக்கு முன்னர்ஹூரியத் மாநாட்டு அமைப்பினைச்சேர்ந்தவர்கள் பேரணி நடத்தினார்கள்.
பிரிவினை வாதத்தலைவர் செய்யது அலி கிலானி டெல்லியில் இருந்து காஷ்மீருக்கு தற்போது திரும்பியுள்ளார்.அவரது வருகையையொட்டி ஶ்ரீநகரில் ஹூரியத் அமைப்பினர் இந்த பேரணியை நடத்தினார்கள்.
இந்த பேரணிக்கு மஸ்ரத் ஆலம் தலைமை தாங்கினார்.அவர் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதாக கடந்த4ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டு கடந்த மாதம் விடுதலை ஆனவர் ஆவார். இந்த பேரணி ஶ்ரீநகர் விமான நிலையத்தில் இருந்து கிலானி வீடு வரை நடந்தது. அதில் ஆயிரக்கணக்கான ஹூரியத் அமைப்பினர் கலந்து கொண்டார்கள். பேரணியில் சிலர் பாகிஸ்தான் தேசியக் கொடியை கையில் எடுத்து வந்தனர். அவர்கள் இந்தியாவுக்கு எதிராகவும் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் கோஷம் எழுப்பினார்கள்.
மேலும் அந்த பேரணியில் கலந்து கொண்டவர்கள் ஹதர் போரா என்ற இடத்தில் பாகிஸ்தானின் தேசியக் கொடியையும் ஏற்றினார்கள்.
ஸ்ரீநகர் போராட்டத்தில் கல்வீச்சு ,தடியடி
ஜம்மு காஷ்மீரில் உள்ள டிரால் பகுதியில் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2இளைஞர்கள் கொல்லப்பட்டனர். இதனை கண்டித்து நேற்று டிரால் பகுதியிலும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளிலும் மோதல் ஏற்பட்டது.அப்போது பாதுகாப்பு படையினர் மீது போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினார்கள்.இதனைத்தொடர்ந்து பாதுகாப்பு படையினர் தடியடி நடத்தினார்கள். இந்த மோதலில் 2போலீசார் உள்பட 12பேர் காயம் அடைந்தார்கள் என ஒருபோலீஸ் அதிகாரி தெரிவித்தார்.
நவ் ஹட்டா பகுதியில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க ஜாமியா மஸ்ஜித் மசூதியில் நேற்று வெள்ளிக்கிழமை பிரார்த்தனை நடந்தது. இந்த பிரார்த்தனை முடிந்ததும் ராணுவத்தினரின் நடவடிக் கைகளை கண்டித்து சாலைகளில் போராட்டம் நடந்தது. அமைதியாக துவங்கிய இந்த போராட்டத்தில் விரைவில் வன்முறை வெடித்தது. அப்போது பாதுகாப்பு படையினர் மீது கல்வீச்சு நடந்தது. வன்முறையாளர்களை விரட்டுவதற்காக போலீசார் தடியடி நடத்தியதுடன் கண்ணீர் புகைக்குண்டுகளையும் வீசினார்கள்.
பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல் பட்ட இந்த அமைப்பினரின் செயல் இந்தியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஹூரியத் அமைப்பினர் பாகிஸ்தான் தேசியக் கொடியை ஏற்றியது தொடர்பாக உள்துறை அமைச்சர் ராஜ் நாத் சிங் உடனடியாக காஷ்மீர் முதலமைச்சர் முப்தி முகமது செய்யதுவை தொடர்புகொண்டு பேசினார்.
இந்தியாவின் பாதுகாப்பு விஷயத்தில் எந்த சமரசமும் செய்து கொள்ள முடியாது. பாகிஸ்தான் தேசியக்கொடியை ஏற்றியவர்கள் மீது உடனடியாக நடவடிக் கை எடுங்கள் இல்லை யென்றால் மத்திய அரசு நடவடிக் கை எடுக்கும் என்று அப்போது அவர் எச்சரித் தார்.
இந்த நிலையில் ஜம்மு காஷ்மீர் முதல்வர் முப்தி முகமது செய்யது பாகிஸ்தான் தேசியக் கொடியை ஏற்றிய ஹூரியத் அமைப்பினரை எச்சரித்தார். பாகிஸ்தானுக்கு ஆதரவாக தேசியக் கொடி ஏற்றுவதையும் கோஷம் எழுப்புவதையும் ஏற்க முடியாது இந்த செயலை செய்தவர்கள் மீது சட்டம் தன் கடமையை செய்யும் என்று முதல்வர் கூறினார்.
இதற்கிடையில் ஹூரியத் அமைப்பின் நடவடிக் கையை கண்டித்து பல்வேறு கட்சிகளும் கண்டனம் தெரிவித்தன. இந்த சூழலில் பிரிவினை வாத தலைவர்கள் சையது அலி கிலானி,மஸ்ரத் ஆலம், மற்றும் பீர் சைபுல்லா ஆகியோர் மீது 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஹூரியத் மாநாட்டு அமைப்பின் பேரணிக்கு தலைமை தாங்கிய மஸ்ரத் ஆலம் கூறுகையில் காஷ்மீர் மாநில மக்களின் விருப்பத்தைதான் நாங்கள் வெளிப்படுத்தினோம். அது தவறு என்றால் கைது செய்யலாம். சிறை செல்ல எங்களுக்கு பயம் இல்லை அது எங்களுக்கு பழகி விட்டது என்றார்.
மஸ்ரத் ஆலமின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜம்முவில் நேற்று முன்தினம் பொதுமக்கள் திரண்டு போராட்டம் நடத்தினார்கள்.அப்போது மஸ்ரத் ஆலம் படத்தை அவர்கள் எரித்தார்கள். இந்த நிலையில் ஹூரியத் பிரிவினை வாதத்தலைவர்கள் நேற்று ஶ்ரீநகரில் இருந்து புல்வாமா மாவட்டத்தில் உள்ள டிரால் பகுதி நோக்கி பேரணி நடத்த முடிவு செய்தனர்.டிரால் பகுதியில் ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இரண்டு இளைஞர்கள் கொல்லப்பட்டதை கண்டித்து இந்த பேரணிக்கு பிரிவினை வாத தலைவர்கள் அழைப்பு விடுத்திருந்தனர்.
இந்த நிலையில் நேற்று காலை மத்திய அரசு அதிரடி நடவடிக் கை மேற்கொண்டது. இதன்படி பிரிவினை வாதத்தலைவரான மஸ்ரத் ஆலம், ஹப்பக்கடல் பகுதியில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார். அவர் ஷாகித் குஞ்ச் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கடந்த 4ஆண்டுகளாக மஸ்ரத் ஆலம் சிறையில் அடைக்கப்ப ட்டிருந்தார்.அவரை கடந்த மாதம் தான் ஜம்மு காஷ்மீர் அரசு விடுதலை செய்திருந்தது. தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வரும் அவரை விடுதலை செய்தது குறித்து சர்ச்சையும் எழுந்தது. இதுபற்றி நாடாளுமன்றத்தில் மோடி விளக்கம் அளித்தார்.
மஸ்ரத் ஆலம் காஷ்மீரில் அமைதியை சீர்குலைப்பார் என்கிற கருத்தை பலரும் எச்சரித்து இருந்தனர். அதனை உறுதிபடுத்துவது போல ஶ்ரீநகரில்15ம் தேதியன்று பேரணி நடத்தி பாகிஸ்தான் நாட்டு தேசியக் கொடியை அவரது ஆதரவாளர்கள் எடுத்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் மத்திய அரசின் உத்தரவைத்தொடர்ந்து மஸ்ரத் ஆலமை ஜம்மு காஷ்மீர் அரசு கைது செய்துள்ளது.
அவரது கைது பற்றி காஷ்மீர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், பட்கம் காவல் நிலையத்தில் பதிவான வழக்குகள் அடிப்படையில்மஸ்ரத் ஆலம் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்றார். கைது செய்யப்பட்டுள்ள மஸ்ரத் ஆலம் கூறுகையில், 1947ம்ஆண்டில் இருந்தே காஷ்மீரில் பாகிஸ்தான் தேசியக் கொடி ஏற்றப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 18 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 18 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.