முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒருங்கிணைந்த 4 வாரங்களுக்குள் ஜனதா பரிவாரில் கருத்து வேறுபாடு

சனிக்கிழமை, 18 ஏப்ரல் 2015      அரசியல்
Image Unavailable

ஒருங்கிணைந்து 4 வாரமே ஆன நிலையில் ஜனதா பரிவாரில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஜனதா பரிவார் குடும்பத்தின் மாநிலங்களவை தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள சரத் யாதவுக்குப் பதிலாக முலாயம்சிங்கின் சகோதரரான ராம்கோபால் யாதவ் அப்பதவியில் அமர்த்தப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதனால், ஜனதா பரிவார் ஒன்றிணைந்த நான்கு நாட்களுக்குள் கருத்து வேறுபாடு கிளம்பி விட்டதாக கருதப்படுகிறது.


கடந்த 15ம் தேதி சமாஜ்வாதி, ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், மதசார்பற்ற ஜனதா தளம், இந்திய தேசிய லோக் தளம் மற்றும் சமாஜ்வாதி ஜனதா ஆகிய ஆறு கட்சிகளின் தலைவர்களால் ஜனதா பரிவார் என்ற பெயரில் அனைத்தும் ஒன்றிணைக்கப்பட்டது. அதில் நாடாளுமன்றத்தின் மக்களவை தலைவராக முலாயம் சிங்கும் மாநிலங்களவை தலைவராக சரத் யாதவும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டது. இவர்களில் உ.பியை ஆளும் சமாஜ்வாதி கட்சியின் தலைவராக முலாயமும், பீகாரைஆளும் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவராகவும் சரத் யாதவ் இருந்தனர்.


இந்நிலையில், ஜனதா ஒன்றிணைந்த நான்கு நாட்களுக்குள் கருத்து வேறுபாடுகள் கிளம்பியுள்ளது. சரத் யாதவுக்குப் பதிலாக முலாயமின் சகோதரரும் அவரது கட்சியின் மூத்த எம்பியுமான ராம்கோபால் யாதவை மாநிலங்களவை தலைவராக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.


இது குறித்து லக்னோவில் செய்தியாளர்களிடம் தெரிவித்த சமாஜ்வாடி கட்சியின் பொதுச் செயலாளர்களில் ஒருவரான கிரோன்மாய் நந்தா கூறுகையில்,
ஒன்றிணைந்த கட்சியின் மாநிலங்களவை தலைவராக அதில் நீண்ட காலமாக உறுப்பினராக இருப்பவர் அமர்த்தப்பட வேண்டும். சரத் யாதவ் ஒரு மூத்த உறுப்பினர் என்பதில் ஐயமில்லை. எனினும், அவரை விட அதிக காலம் மாநிலங்களவையின் உறுப்பினராக இருந்து வருபவர் ராம்கோபால். எனவே அவரையே மாநிலங்களவைத் தலைவராக்க வேண்டும் எனக் கூறினார். இருப்பினும், இது தனது தனிப்பட்ட கருத்து தவிர, அதன் மீது கட்சி எந்த முடிவையும் எடுக்கவில்லை என்றும் கருத்து தெரிவித்திருந்தார். 


தற்போது மாநிலங்களவையில் சமாஜ்வாதி கட்சியின் தலைவராக ராம்கோபால் இருந்து வருகிறார். அப்பதவிக்கு ஜனதா குடும்பத்தில் எடுத்த முடிவின்படி சரத் யாதவ் நியமிக்கப்பட்டால் அது சமாஜ்வாதிக்கு பெரிய இழப்பாகும் என கருதப்படுகிறது. இது, 2017-ல் வரவிருக்கும் உ.பியின் அடுத்த சட்டப்பேரவை தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் சமாஜ்வாதி கட்சியின் சில தலைவர்கள் கருதுகின்றனர். மேலும், ஜனதா இணையும் போதே மாநிலங்களவை தலைவர் பதவி தமக்கு தரப்பட வேண்டும் என ராம்கோபால் யாதவ் வலியுறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து