முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிலம் கையக மசோதாவை அனைத்து எதிர்க்கட்சிகளும் ஆதரிக்க வேண்டும் :வெங்கய்யா நாயுடு வலியுறுத்தல்

சனிக்கிழமை, 18 ஏப்ரல் 2015      இந்தியா
Image Unavailable

திருத்தி அமைக்கப்பட்டுள்ள நிலம் கையகப்படுத்தும் மசோதாவை அனைத்து எதிர்க்கட்சிகளும் ஆதரிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் வெங்கையா  நாயுடு வலியுறுத்தி உள்ளார்.


ஐதராபாத்தில் இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,
நிலம் கையகப்படுத்தும் சட்டத் திருத்த மசோதா உட்பட பல்வேறு முக்கிய மசோதாக்கள் நாடாளுமன்றத்தின் வரும் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட உள்ளன. நிலம் கையக மசோதாவுக்கு காங்கிரஸ் உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஆதரவளிக்க வேண்டும். உலக வளர்ச்சிக்கு நம்நாடு ஈடுகொடுத்து முன்னேற, இந்த சட்டத்தை அமல்படுத்துவது காலத்தின் கட்டாயமாக உள்ளது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆனந்த் சர்மா, முன்னாள் மகாராஷ்டிர முதல் வர் பிருத்விராஜ் சவாண் ஆகியோர் கூட இந்த மசோ தாவுக்கு ஆதரவளித்து சில ஆலோ சனைகளை வழங்கியுள்ளனர்.


ஆனால் காங்கிரஸ் கட்சியினர் இந்த மசோதாவை எதிர்க்க வேண்டும் என்கிற நோக்கில் மட்டுமே எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இப்போது கூட இந்த மசோதாவில் சிறந்த ஆலோசனைகளை ஏற்றுக் கொள்ள மத்திய அரசு தயாராக உள்ளது. இவ்வாறு வெங்கய்ய நாயுடு கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து