முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேகதாது விவகாரம்: கர்நாடகத்தில் முழு அடைப்பு

சனிக்கிழமை, 18 ஏப்ரல் 2015      இந்தியா
Image Unavailable

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்டும் விவகாரம் தொடர்பாக கர்நாடகாவில் நேற்று முழு அடைப்பு நடைபெற்றது.
இந்த 12 மணி நேர முழு அடைப்பிற்கு கன்னட அமைப்புகள் பலவும் அழைப்பு விடுத்திருந்தன. இதற்கான பேரணியை கன்னட சங்கங்களின் தலைவர் வாட்டாள் நாகராஜ் பெங்களூரில் நடத்தினார். இதையடுத்து முழு அடைப்புக்கு கர்நாடக அரசு ஊழியர் சங்கம், லாரி, கார், ஆட்டோ ஓட்டுனர் சங்கம், கர்நாடக அரசு பஸ் மற்றும் பெங்களூர் மாநகர போக்குவரத்து கழக ஊழியர்கள் உட்பட 400க்கும் அதிகமான அமைப்புகள் ஆதரவு அளிப்பதாக அறிவித்தன.

இதையடுத்து நேறறு கர்நாடக மாநிலம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடந்தது. பெங்களூர், மைசூர், தும்கூரு, மாண்டியா உட்பட பல்வேறு முக்கிய நகரங்களில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. லாரி, ஆட்டோ, பெட்ரோல் பங்க், ஓட்டல்கள், சினிமா துறையினரும் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

கடையடைப்பு குறித்து முதல்வர் சித்தராமையா கூறுகையில்,
கர்நாடகத்தில் புதிய அணை கட்டுவதற்கு ஆதரவாக இந்த போராட்டம் நடக்கிறது என்றாலும் முழு அடைப்பு போராட்டத்துக்கு அரசு ஆதரவு இல்லை. மக்கள் அமைதியை கடைப்பிடிக்க வேண்டும் என்றார். பந்த்தையொட்டி மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து