எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழக அரசின் ரூ.1 லட்சம் கோடி முதலீடு என்னும் செயல் திட்டத்தில், கோவை தொழில் அதிபர்கள் ரூ.20 ஆயிரம் கோடி முதலீடு செய்ய முன்வர வேண்டும் என்று, கோவையில் நடந்த தொழில் அதிபர்கள் சந்திப்பு கூட்டத்தில், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி வேண்டுகோள் விடுத்துப் பேசினார்.
சென்னையில், வருகின்ற மே மாதம் 23, 24 ஆகிய தேதிகளில் உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுகிறது. இதற்காக முதலீட்டாளர்களை கவர்ந்திடும் வகையில், தமிழ்நாடு உலகளாவிய முதலீட்டாளர்கள் சந்திப்பு- 2015 என்ற நிகழ்ச்சி, கோவை தாஜ் விவாண்டா ஹோட்டல் வளாகத்தில் நடந்தது.
இந்த கூட்டத்தில், தொழில் துறை அமைச்சர் தங்கமணி தலைமை தாங்கி பேசியதாவது:-
ஜெயலலிதாவின் வழிகாட்டுதலி ன்படி, மே மாதம் 23, 24 ஆகிய தேதிகளில், சென்னையில் நடக்கும் உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாட்டில், ரூ.1 லட்சம் கோடி அளவிற்கு முதலீடுகளை ஈர்க்கும் வண்ணம், வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் முதலீட்டாளர்கள் சந்திப்பு கூட்டம் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் முதல்முறையாக கோவையில் முதலீட்டாளர்கள் சந்திப்பு நடை பெறுகிறது. தமிழகத்தில் புதிய தொழில் முனைவோர்களுக்கு தேவையான அனைத்து அனுமதிகளையும், விரைவாக வழங்குவதற்காக, அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன. மின்பற்றாக்குறை ஏற்பட்ட காலத்தில், ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்ய, தமிழக அரசு ரூ.90 கோடி செலவில் வரிச்சலுகை அளித்து, முதலீட்டாளர்களை தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது.
2011-ம் ஆண்டு மே மாதத்திலிருந்து இன்று வரை ரூ.2,52,000 கோடி அளவிற்கு கூடுதலாக தமிழக அரசு முதலீடுகளை கவர்ந்துள்ளது. தமிழ்நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சி 7.29 சதவீதம் அளவிற்கு உயர்ந்துள்ளது. இது இந்தியாவின் ஒட்டு மொத்த வளர்ச்சியான 4.74 சதவீதத்தைவிட கூடுதலாகும்.
பல்வேறு மாநிலங்களிலிருந்தும் தொழில் தொடங்க அழைப்புகள் வந்த போதெல்லாம், அழைப்புகளை நிராகரித்து, தமிழகத்தில் தொடர்ந்து தொழில் செய்து வரும் தொழில் அதிபர்களை, தமிழக அரசு பாராட்டுகிறது. தொழில் அதிபர்களுக்கு எந்தவிதத்திலும் தடையாக இல்லாமல், படிக்கற்களாக தொடர்ந்து இந்த அரசு செயல்படும்.
பிற மாநிலங்களில் தொழில் முனைவோர்களுக்கு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்கப்படாததாலும், சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளாலும் தொடர்ந்து தொழில் செய்ய இயலாமல் நலிவடைந்து வருகிறது. ஆனால், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நல்லமுறையில் இருப்பதால், தொழில் செய்ய சிறப்பான சூழ்நிலை உள்ளது.
திருப்பூரில் சாயப்பட்டறை பிரச்சினைக்கு தீர்வுகாண, ரூ.200 கோடிக்கு வட்டியில்லா கடன் வழங்கி, தொடர்ந்து தொழில் செய்ய ஆதரவு கரம் நீட்டியதன் காரணமாக, ரூ.21 ஆயிரம் கோடி பின்னலாடைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. எனவே சென்னையில் நடைபெற உள்ள உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாட்டில், கோவை தொழில் அதிபர்கள் அதிகளவில் கலந்து கொண்டு, முதலீடு செய்ய வேண்டும்.
தமிழக அரசின் ரூ.1 லட்சம் கோடி முதலீடு என்னும் செயல் திட்டத்தில் கோவை தொழில் அதிபர்கள் ரூ.20 ஆயிரம் கோடி முதலீடு செய்ய செயல் வடிவம் கொடுக்க முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
கூட்டத்தில், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:-
கோவை மாநகரில், தொடர்ந்து தொழில் செய்திடும் வகையிலும், தொழில் தொடங்க சாதகமான சூழ்நிலையை உருவாக்கிடும் வகையிலும், தமிழக அரசின் சார்பில் பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் காந்திபுரம் மேம்பாலப் பணிகள், ஒருங்கிணைந்த பஸ் நிலையம், லாரிப்பேட்டை போன்ற வளர்ச்சித் திட்டப்பணிகள் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது.
ஜெயலலிதா தான் மின்சார பற்றாக்குறை பிரச்சினையை தீர்த்து வைத்தார். அதை போல தொழில் துறையில் உள்ள மற்ற பிரச்சினைகளையும் அவர் தீர்த்து வைப்பார். தமிழ்நாட்டிலேயே சென்னைக்கு அடுத்தபடியாக கோவை மாவட்டம் வளர்ந்து வரும் மாவட்டமாக திகழ்ந்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில், அரசு கூடுதல் தலைமை செயலர் (தொழில்துறை) சி.வி.சங்கர், கலெக்டர் அர்ச்சனா பட்நாயக், இந்திய தொழில் கூட்டமைப்பின் தெற்கு மண்டலத் தலைவர் ராஜஸ்ரீ பதி, கோவை மண்டலத் தலைவர் சீனிவாசன், துணை தலைவர் நேத்ரா ஜே.எஸ்.குமார், இந்திய தொழில் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் ரவிசாம், கோவை மண்டல கூட்டமைப்பு தலைவர் கே.இளங்கோ உட்பட தொழில் அதிபர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 6 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 6 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு: ஏப். 27 வரை விண்ணப்பிக்கலாம்
28 Mar 2024சென்னை, 90 காலிபணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை முறைப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது: ஐகோர்ட் கிளை
28 Mar 2024மதுரை, கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை முறைப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.