முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுஷ்மாவை சந்தித்து நலம் விசாரித்த சோனியா, ராகுல்

திங்கட்கிழமை, 20 ஏப்ரல் 2015      அரசியல்
Image Unavailable

புது டெல்லி: எதிர்க்கட்சிகளின் கடும் அமளியால் பாராளுமன்ற அவை சிறிது நேரம் ஒத்தி வைக்கப்பட்டது. அந்த இடைவெளியில் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் அவரது மகனும், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளருமான ராகுல் காந்தி ஆகியோர் சந்தித்து நலம் விசாரித்தனர்.

சோனியா காந்தி மீதான விமர்சனத்துக்காக அமைச்சர் கிரிராஜ் சிங் வருத்தம் தெரிவிக்கக் கோரி காங்கிரஸ் கட்சியினர் பாராளுமன்றத்தில் கடும் அமளியை ஏற்படுத்தினர். இதனால் அவை  சிறிது நேரம் ஒத்தி வைக்கப்பட்டது. அப்போது அந்த இடைவேளையில், சுஷ்மாவை சந்தித்து சோனியாவும், ராகுலும் நலம் விசாரித்தனர்.

இவர்களைத் தவிர காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் எம்.பி. ஜோதிராதித்ய சிந்தியா, ஆம் ஆத்மி கட்சியின் பகவத் மான், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சுப்ரிய சூலே ஆகியோரும் சுஷ்மா ஸ்வராஜிடம் நலம் விசாரித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து