முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜம்மு எல்லையில் பாக். ராணுவம் மீண்டும் தாக்குதல்

திங்கட்கிழமை, 20 ஏப்ரல் 2015      இந்தியா
Image Unavailable

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் சர்வதேச எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது.

இது குறித்து எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் கூறும் போது, கத்துவா மாவட்டம் ஹிராநகர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு பாகிஸ்தான் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். பீரங்கிக் குண்டுகளை வீசியும் தாக்குதலில் ஈடுபட்டனர். சர்வதேச எல்லையில் உள்ள அடர்த்தியான புதர்களில் பதுங்கியபடி முன்னேறிய பாகிஸ்தான் படையினர் 20 மீட்டர் அளவுக்கு முன்னேறி வந்து தாக்குதல் நடத்தினர். எல்லைப் பாதுகாப்பு வீரர்கள் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர்.

மாலை 6 மணிக்கு தொடங்கிய இந்த  தாக்குதல் இரவு வரை நீடித்தது. குடியிருப்புப் பகுதிகளில் சில பீரங்கிக் குண்டுகள் விழுந்தன. இருப்பினும், இத்தாக்குதலில் உயிர்ச்சேதமோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை. இப்போதைக்கு எல்லையில் நிலைமை கட்டுக்குள் உள்ளது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து