முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எய்ம்ஸ் டாக்டர் தற்கொலை ஓரின சேர்க்கை கணவர் கைது

திங்கட்கிழமை, 20 ஏப்ரல் 2015      இந்தியா
Image Unavailable

டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் பணிபுரிந்த பெண் மருத்துவர் தனது ஓரினச்சேர்க்கை கணவரின் கொடுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டார்.

டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவராக இருந்தவர் ப்ரியா வேதி(31). அவருக்கும் அதே மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர் கமல் வேதி என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த பிறகு தான் கமல் ஒரு ஓரின சேர்க்கையாளர் என்பது மனைவி ப்ரியாவுக்கு தெரிய வந்தது. இருப்பினும் அவர் அதை பெரிதுபடுத்தாமல் இருந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு கணவன் மனைவி இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ப்ரியா வீட்டை விட்டு வெளியேறி டெல்லி பஹர்கஞ்ச் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கினார். மேலும் பேஸ்புக்கில் தனது கணவர் மனிதர் அல்ல பேய் என்றும், இனியும் அவர் தன்னை மன ரீதியாக செய்யும் கொடுமைகளை ஏற்க முடியாது என்றும் தெரிவித்து விட்டு பிரியா தற்கொலை செய்து கொண்டார்.

இதற்கிடையே தனது மனைவியை காணவில்லை என கணவர் கமல் போலீசில் புகார் அளித்தார். போலீசார் பிரியாவை தேடி வந்த நிலையில் வந்த தகவலை அடுத்து அந்த ஓட்டலுக்கு விரைந்து சென்ற போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்றபோது ப்ரியா ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தார். அந்த அறையில் தற்கொலை செய்யும் முன்பு அவர் எழுதிய கடிதமும் கண்டுபிடிக்கப்பட்டு இருந்தது. அந்த கடிதம் மற்றும் ப்ரியாவின் ஃபேஸ்புக் பதிவை வைத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து டாக்டர் கமல் வேதியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து