முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வழக்கறிஞர் முத்துசெல்வம் கட்சியிலிருந்து நீக்கம்: ஜெயலலிதா அறிவிப்பு

திங்கட்கிழமை, 20 ஏப்ரல் 2015      அரசியல்
Image Unavailable

வடசென்னை வடக்கு மாவட்ட அதிமுக வழக்கறிஞர் அணி துணைச்செயலாளர் முத்துச்செல்வம் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இது குறித்து மக்களின் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை:

கழகத்தின் கொள்கைகளுக்கும் குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கு முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு கற்பிக்கும்வகையில் நடந்து கொண்டதாலும் கழகக்கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்டதாலும் வடசென்னை வடக்கு மாவட்டத்தை சேர்ந்த மாவட்ட வழக்கறிஞர் அணி துணைச்செயலாளரும் ஆர்.கே. நகர் மாணவரணி இணைச்செயலாளருமான முத்துசெல்வம் இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து