முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லிபிய படகு விபத்துக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் இரங்கல்

செவ்வாய்க்கிழமை, 21 ஏப்ரல் 2015      உலகம்
Image Unavailable

நியூயார்க்: சுமார் 700 அகதிகளுடன் மத்திய தரைக்கடல் பகுதியில் விபத்துக்குள்ளான லிபியா சம்பவத்துக்கு ஐ.நா. பொது செயலாளர் பான் கீ மூன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

இத்தாலி அருகே மத்திய தரைக்கடல் பகுதியில், அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கடந்த சனிக்கிழமை மூழ்கி 700-க்கும் அதிகமானோர் பலியாகினர். இந்த சம்பவம் உலகையே உலுக்கி உள்ளது. இது குறித்து ஐக்கிய நாடுகளின் பொது செயலாளர் பான்கிமூன் கூறுகையில், 'இந்த சம்பவம் தான் உண்மையான டைட்டானிக் சம்பவம்,' என்று கூறி, இரங்கல் தெரிவித்துள்ளார்.

மத்திய தரைக்கடல் பகுதியில் பயணிக்கும் குடியேறும் மக்கள் தொடர்ந்து பெரும் ஆபத்தை சந்தித்து வருவதால் இதற்கான வழியை காண வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து