முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

13,14-வது கட்ட அ.தி.மு.க. அமைப்பு தேர்தல்: வரும் 24,முதல்.30-ந் தேதிவரை நடைபெறும்: .மக்களின் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 21 ஏப்ரல் 2015      அரசியல்
Image Unavailable

சென்னை, ஏப்.22:அதிமுக 13-வது  உட்கட்சி தேர்தல் வரும் 24-ந் தேதி 25 -ந் தேதி  நடைபெறும் என்று மக்களின் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா அறிவித்து இருக்கிறார்..14; வது  கட்ட தேர்தல் வரும் 29-ந் தேதி 30 -ந் தேதிகளிலும் நடைபெறும் என்று அவர் அறிவித்து இருக்கிறார்.மாவட்ட தேர்தல் பார்வையாளர்கள், ஆணையாளர்கள் பட்டியலையும் அவர் வெளியிட்டு இருக்கிறார்.  இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அனைத்து நிலைகளுக்குமான அமைப்புத் தேர்தல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 

இந்நிலையில் 13-ஆவது கட்டமாக, கழக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பிற மாநிலங்களான புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, கேரளா, புதுடெல்லி மற்றும் அந்தமான் ஆகியவற்றிற்கு உட்பட்ட கிளை, வார்டு, வட்டக் கழக நிர்வாகிகள் பொறுப்புகளுக்கு 24.4.2015, 25.4.2015 ஆகிய தேதிகளிலும்; அதனைத் தொடர்ந்து 14-ஆவது கட்டமாக, பிற மாநிலக் கழக நிர்வாகிகள், மாவட்டக் கழக நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், தொகுதி, பகுதி, நகரக் கழக நிர்வாகிகள் பொறுப்புகளுக்கு 29.4.2015, 30.4.2015 ஆகிய தேதிகளிலும் நடைபெற உள்ள தேர்தல்களை நடத்திடும் வகையில், தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் ஆணையாளர்களாக இத்துடன் இணைக்கப்பட்டுள்ள பட்டியலில் குறிப்பிடப்பட்டு உள்ளவர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.

கழக அமைப்புத் தேர்தல்கள் சுமூகமாக நடைபெறும் வகையில் தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் ஆணையாளர்களுக்கு, பிற மாநிலங்களைச் சேர்ந்த கழக உடன்பிறப்புகள் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து