முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ 1,200கோடி மதிப்புள்ள பிணையப் பத்திரங்கள் ஏலம்: தமிழக அரசு

வெள்ளிக்கிழமை, 24 ஏப்ரல் 2015      வர்த்தகம்
Image Unavailable

சென்னை, :தமிழக அரசின் ரூ 1,200கோடி மதிப்புள்ள மதிப்புள்ள பிணையப் பத்திரங்கள் ஏலம்  விடப்பட உள்ளது.

இது  குறித்து   தமிழக அரசின் நிதித் துறையின் அரசு முதன்மைச் செயலாளர் க. சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

மொத்தம் ரூபாய் 1,200.00 கோடி மதிப்புள்ள பங்குகள் வடிவிலான 10 ஆண்டு கால பிணையப் பத்திரங்களை ஏலத்தின் மூலம் விற்பனை செய்யவிருப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்த ஏலம் இந்திய ரிசர்வ் வங்கியால், மும்பையில் உள்ள அதன்
மும்பை-கோட்டை அலுவலகத்தில்  ஏப்ரல் 28, 2015 அன்று நடத்தப்படும். போட்டி  ஏலக் கேட்புகள் முற்பகல் 10.30 மணியிலிருந்து பிற்பகல் 12.00 மணிக்குள்ளாகவும் போட்டியற்ற ஏலக் கேட்புகள் முற்பகல் 10.30 மணியிலிருந்து 11.30 மணிக்குள்ளாகவும் இந்திய ரிசர்வ் வங்கியின் ஒருங்கிணைந்த வங்கி சேவை முறையில் [Reserve Bank of India Core Banking Solution(E-Kuber) System] மின்னணு படிவத்தில் (Electronic format) ஏப்ரல் 28,  2015 அன்று சமர்ப்பிக்கப்பட வேண்டும்.  இவ்வாறு  அந்த    செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து