எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை: ஜெயலலிதா ஆணைப்படி புதுச்சேரி, கர்நாடகம், ஆந்திரம் உட்பட 7 மாநிலங்களுக்கு அண்ணா தி.மு.க. அமைப்புத் தேர்தல்கள் நேற்றுதுவங்கியது. ஒவ்வொரு இடத்திலும் ஏராளமானபேர் ஆர்வத்துடன் வேட்புமனுக்களை கொடுத்தார்கள்.
அண்ணா தி.மு.க. அமைப்புத் தேர்தல்கள் ஒவ்வொரு கட்டமாக நடந்து வருகிறது. இதுவரை 12 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளது. 13-வது கட்டமாக, கழக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பிற மாநிலங்களான புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, கேரளா, புதுடெல்லி மற்றும் அந்தமான் ஆகியவற்றிற்கு உட்பட்ட கிளை, வார்டு, வட்டக் கழக நிர்வாகிகள் பொறுப்புகளுக்கு நேற்றும்,இன்றும், நடக்கிறது. அதனைத் தொடர்ந்து 14-வது கட்டமாக, பிற மாநிலக் கழக நிர்வாகிகள், மாவட்டக் கழக நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், தொகுதி, பகுதி, நகரக் கழக நிர்வாகிகள் பொறுப்புகளுக்கு 29.4.2015, 30.4.2015 ஆகிய தேதிகளி லும் நடைபெற உள்ளது. தேர்தல்களை நடத்திட தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் ஆணையாளர்களை ஜெயலலிதா நியமித்துள்ளார்.
தேர்தல் பொறுப்பாளர்கள்
1) புதுச்சேரி மாநில தேர்தல் பொறுப்பாளராக அமைச்சர் ஆர். காமராஜ் (திருவாரூர் மாவட்ட செயலாளர்)
2) கர்நாடக மாநில தேர்தல் பொறுப்பாளராக அமைச்சர் பி.வி. ரமணா (திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர்)
3) ஆந்திர மாநில தேர்தல் பொறுப்பாளராக அமைச்சர் வி. செந்தில்பாலாஜி (கரூர் மாவட்ட செயலாளர்)
4) மகாராஷ்டிர மாநில தேர்தல் பொறுப்பாளராக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் (ஜெயலலிதா பேரவைச் செயலாளர்)
5) கேரள மாநில தேர்தல் பொறுப்பாளராக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி (கோவை புறநகர் மாவட்ட செயலாளர்)
6) புதுடெல்லி மாநில தேர்தல் பொறுப்பாளராக அமைச்சர் பி. தங்கமணி (நாமக்கல் மாவட்ட செயலாளர்)
7) அந்தமான் மாநில தேர்தல் பொறுப்பாளராக அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் (புதுக்கோட்டை மாவட்ட செயலாளர்) ஆகியோரை அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா நியமித்திருந்தார். இது தவிர தேர்தல் ஆணையாளர்களையும் ஜெயலலிதா நியமித்திருந்தார்.
அந்தந்த மாநிலங்களில் தேர்தல் பொறுப்பாளரும், தேர்தல் ஆணையாளர்களும் வேட்பு மனுக்களை பெற்றார்கள்.ஒவ்வொரு இடத்திலும் தொண்டர்கள் ஆர்வத்துடன் மனு கொடுத்தார்கள். . ஒவ்வொரு இடத்திலும் தொண்டர்கள் ஆர்வத்துடன் குவிந்தனர்.
அந்தமான்
அந்தமான் மாநிலத்தில் மனுக்களை தேர்தல் பொறுப்பாளரான அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பெற்றுக் கொண்டார். உடன் தேர்தல் ஆணையாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் பி.கே.வைரமுத்து, மு.ராஜநாயகம், வி.ஆர்.கார்த்திக் தொண்டைமான், முன்னாள் அமைச்சர் ராதாகிருஷ்ணன் உடனிருந்தனர்.இங்கு ஆர்வத்துடன் ஏராளமானபேர் மனு கொடுத்தனர்.
கர்நாடகம்
கர்நாடக மாநில அண்ணா தி.மு.க. அமைப்பு தேர்தல் நேற்று பெங்களூர் தமிழ் சங்க அரங்கில் துவங்கியது. இங்கு பொறுப்பாளராக தமிழக அமைச்சரும் திருவள்ளுர் மேற்கு மாவட்ட செயலாளருமான பி.வி.ரமணா மற்றும் ஆணையாளர்கள் திருவள்ளூர் மேற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் இரா. மணிமாறன், திருவள்ளுர் மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் டி. மகேந்திரன், திருவள்ளூர் மேற்கு மாவட்ட மாணவர் அணி செயலாளர் டி. முல்லைவேந்தன், திருவள்ளுர் மேற்கு மாவட்ட வாழக்கறிஞர் பிரிவு செயலாளர் பி. என். உதயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கழக அமைப்பிற்கான பதவிகளுக்கு போட்டியிட விருப்பம் தெரிவித்து ஏராளமான கழக தொண்டர்கள் தேர்தல் பொறுப்பாளர்களிடம் இருந்து அதற்கான தொகையினை செலுத்தி விண்ணப்பங்களை ஆர்வமுடன் பெற்று சென்றனர்.
இதில் மாநில கழக செயலாளர் வா. புகழேந்தி, அவைத்தலைவர் கே. முனுசாமி, பொருளாளர் ராஜேந்திரன், இணை செயலாளர்கள் ஜி.ராஜி, ஏ. மனோகர், எம். மஞ்சுளா, மாவட்ட கழக செயலாளர் குமார், ஜெயலலிதா பேரவை செயலாளர் ஐ.டி.ஐ. சுப்பிரமணி, இளைஞர் அணி செயலாளர் அன்புவேல், பொதுகுழு உறுப்பினர்கள் ரவிகுமார், காசிராஜன், ஆர். ரவி, தொகுதி செயலாளர்கள் பெருமாள், தேவதாஸ், ஐ. ராமசந்திரன், ஏ. எம். சந்தர், சிம்சன் ஷ்ண்முகம், மகளிர் அணி செயலாளர் தனம்மாள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி
புதுச்சேரியில் தேர்தல் பொறுப்பாளராக திருவாரூர் மாவட்ட செயலாளரும், தமிழக உணவு அமைச்சருமான ஆர். காமராஜை அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா நியமனம் செய்தார். திருவாரூர் மாவட்ட தேர்தல் ஆணையாளர்களாக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் எல்.எம். முகமது அஷ்ரப், ஜெயலலிதா பேரவை செயலாளர் பொன். வாசுகி ராம், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் சிபிசி அன்பழகன், மாணவர் அணி செயலாளர் ஜே. விஜயராகவன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
நேற்று காலை உப்பளத்திலுள்ள அண்ணா தி.மு.க. தலைமைக்கழகத்திற்கு வந்தனர். புதுச்சேரி நகரிலுள்ள 122 வார்டுகளுக்கும், கொம்யூன் பஞ்சாயத்துகளிலுள்ள 98 வார்டுகளுக்கான செயலாளர் பதவிக்கு போட்டியிடுகின்றவர்கள் விண்ணப்ப படிவங்களை வாங்கிச் சென்றனர். தேர்தல் விண்ணப்பங்களை வாங்கிச் சென்றவர்கள் ,இன்று மாலைக்குள் தேர்தல் பொறுப்பாளர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்5 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 52 min ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
ரேசன் அரிசி கடத்தல் விவகாரம்: ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை
24 Apr 2024சென்னை, ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த தி.மு.க.வினரை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனையை பெற்றுத் தரவேண்டுமென்று முன்னாள்
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
சீனாவுக்கு உளவு வேலை: தந்தை, மகனுக்கு தைவானில் 8 ஆண்டுகள் சிறை தண்டனை
24 Apr 2024தைபே, சீனாவுக்கு உளவு வேலை பார்த்த குற்றச்சாட்டின் பேரில் தந்தை மற்றும் மகன் என இருவருக்கும் தலா 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
ஆந்திராவில் தொண்டர்களுடன் சென்று நடிகர் பவன் கல்யாண் வேட்புமனு தாக்கல்
24 Apr 2024அமராவதி, ஆந்திர சட்டசபை தேர்தலில் போட்டியிடும் நடிகர் பவன் கல்யாண் தொண்டர்கள், ரசிகர்களுடன் ஊர்வலமாக சென்று வேட்பு மனுதாக்கல் செய்தார்.
-
2-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவடைந்தது: 89 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு
24 Apr 2024புது டெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் 80 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
-
வள்ளலார் சர்வதேச மையம்: ஆய்வு செய்து தொல்லியல் குழு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவு
24 Apr 2024சென்னை, வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அமைய உள்ள பகுதியை தொல்லியல் குழு அமைத்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்த
-
கண்ணுக்கு தெரியாத வாக்காளர்களை கண்டு பிரதமர் மோடி பயப்படுகிறார்: கேரளாவில் கார்கே பேட்டி
24 Apr 2024திருவனந்தபுரம், கண்ணுக்கு தெரியாத வாக்காளர்களை கண்டு பிரதமர் மோடி பயப்படுகிறார்.
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.