முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிலநடுக்கத்தால் நேபாளத்தில் 100க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கலாம்: இந்தியாவுக்கான தூதர் அச்சம்

சனிக்கிழமை, 25 ஏப்ரல் 2015      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, நிலநடுக்கத்தால் நேபாளத்தில் 100க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கலாம் என்று கருதுவதாக இந்தியாவுக்கான அந்நாட்டுத் தூதர் தீப் உபாத்யாயா அச்சம் தெரிவித்துள்ளார்.

நேபாளத்தில் நேற்று ரிக்டரில் 7.9 அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அந்நாட்டில் பல இடங்களில் கட்டிடங்கள், கோவில்கள் இடிந்து தரைமட்டமாகின. தலைநகர் காத்மண்டுவின் அடையாளங்களில் ஒன்றாக இருந்த தரகரா டவர் என்ற 9 மாடி கட்டிடம் தரைமட்டமானது. இந்நிலையில் டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய இந்தியாவுக்கான நேபாளத் தூதர் தீபா உபாத்யாயா,  நிலநடுக்கத்தில் 100க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கலாம் என தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து