முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிலநடுக்கம்: உயர்மட்ட குழுவுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை

சனிக்கிழமை, 25 ஏப்ரல் 2015      இந்தியா
Image Unavailable

புது டெல்லி: நில நடுக்கம் தொடர்பாக உயர் மட்ட குழுவுடன் பிரதமர் நரேந்திர மோடி அவரச ஆலோசனை நடத்தினார்.  நேபாளத்தை மையமாக கொண்டு ஏற்பட்ட நில நடுக்கத்தால் வட இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருக்கும் நேபாள பிரதமரை மோடி தொலைபேசியில் அழைக்க முயன்றார். ஆனால், அவரை தொடர்பு கொள்ள முடியாத நிலையில், நேபாள ஜனாதிபதியை தொடர்பு கொண்டு நிலைமையை கேட்டறிந்தார்.

இந்தியா சார்பில் மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவுவதாக மோடி வாக்களித்தார். இந்நிலையில், இந்தியாவின் சேத விவரம் மற்றும் நேபாள மீட்பு பற்றி ஆலோசிக்க உயர்மட்ட ஆலோசனை கூட்டத்திற்கு மோடி அழைப்பு விடுத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து