முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நில நடுக்க அதிர்வுகள் மேலும் 4 நாட்களுக்கு நீடிக்கும்: நிபுணர்கள் கருத்து

சனிக்கிழமை, 25 ஏப்ரல் 2015      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, நேபாள நாட்டின் நில நடுக்க தாக்கம் இந்தியாவிலும் மேலும் மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு நீடிக்கும் என்று நிலவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 

நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலித்தது. சென்னையிலும் நந்தனம் உள்ளிட்ட இடங்களில் லேசான நில நடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லியுள்ள நிலவியல் நிபுணர், பெசின் கூறுகையில்,

நில நடுக்கத்தை தொடர்ந்து ஏற்படும் அதிர்வுகள் பொதுவாக இரண்டு அல்லது மூன்று நாட்கள், நீடிக்கும் வாய்ப்புள்ளது. எனவே மக்கள் பயப்பட வேண்டாம் என்றார். சில நிபுணர்கள், இதுபோன்ற அதிர்வுகள் மேலும் ஒரு வாரம் வரை கூட நீடிக்கும் என்று தெரிவித்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து