முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நேபாள மக்களின் கண்ணீரை துடைப்போம் வானொலி நிகழ்ச்சியில் மோடி பேச்சு

ஞாயிற்றுக்கிழமை, 26 ஏப்ரல் 2015      இந்தியா
Image Unavailable

புது டெல்லி: நேபாளத்தின் வலி, இந்தியாவின் வலி. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நேபாள மக்களின் கண்ணீரையும் நாம் துடைப்போம் என மான் கீ பாத் வானொலி உரையில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லி ஆல் இந்தியா ரேடியோவில் மான் கி பாத் என்ற வானொலி நிகழ்ச்சியில் பங்கேற்று பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அப்போது அவர் கூறியதாவது,

நேபாளத்தின் வலி இந்தியாவின் வலி. கடந்த 2001ம் ஆண்டு குஜராத் நிலநடுக்கத்தின் போது கட்ச் பகுதியில் நான் இருந்திருக்கிறேன். நிலநடுக்கத்தின் கொடூரத்தை என்னால் இயல்பாகவே கற்பனை செய்து பார்க்க முடிகிறது. தற்போது நேபாளத்தில் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியே முதன்மையானதும் முக்கியமானதும் ஆகும்.

அங்குள்ள அனைத்து மக்களின் கண்ணீரை துடைக்கவும் நாம் முயற்சி செய்ய வேண்டும்  என்றார்.  மேலும் சேவையே நமது தலையாய கடமை என்று தனது உரையில் குறிப்பிட்ட மோடி உலக நாடுகளில் இந்தியாவின் பங்கு இது தான் என்றும் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து