எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி: நிலநடுக்கத்தால் இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது.
நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இந்தியாவில் உத்தரபிரதேசம், பீகார், மேற்கு வங்கம் ஆகிய நேபாள எல்லைகளை ஓட்டியுள்ள மாநிலங்களிலும் நிலநடுக்கம் கடுமையாக உணரப்பட்டது. இதில் பீகாரை நிலநடுக்கம் கடுமையாக தாக்கியது. பீகாரிலும் 7.9 ரிக்டர் அளவுக்கு பாதிப்பு உணரப்பட்டதாக தெரிகிறது. இதனால் பீகாரில் பல்வேறு பகுதிகளிலும் கட்டிடங்கள், குடியிருப்புகள் பகுதிகள் பலத்த சேதம் அடைந்தன. இதில் கட்டிட இடிபாடுகளில் சிக்கியும், காயமடைந்தவர்கள் சிலர் மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இவ்வாறு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பீகாரில் இறந்தவர்களின் எண்ணிகை 42ஆக அதிகரித்தது.64பேர் காயம் அடைந்தார்கள்.
பீகாரில் மீட்பு பணிகளை தீவிரப்படுத்த முதல்வர் நிதிஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். நிலைமைகள் குறித்து நிதிஷிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் நில நடுக்கம் பாதிக்கப்பட்ட இடங்களில் இரண்டு தினங்களுக்கு பிஎஸ்என் எல் தனது சேவையை இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளது. அதே போல் உத்திரப்பிரதேசத்தில் 10க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இரண்டு மாநிலங்களில் 100க்கும் மேற்ப்பட்டவர்கள் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்தியன் ரயில்வே நேபாளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 1 லட்சம் தண்ணீர் பாட்டில்களை நிலநடுக்கம் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு அனுப்பி வைத்துள்ளது.
நேபாளத்தில் தவித்து வரும் பெண்கள் கால்பந்து குழுவினரை மீட்பதில் முன்னுரிமை அளிக்கப்படும் என மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டரில் இந்தியாவைச் சேர்நஅத கால்பந்து குழு பெண்கள் 18 பேரை மீட்க கவனம் செலுத்தி வருகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த சூழலில் இந்தியாவில் மீண்டும் இரண்டு முறை நில அதிர்வு ஏற்பட்டது. இதில் இதில் நேற்று முன் தினம் 11.13 மணிக்கும், பின்னர் நேற்று அதிகாலை 4.46 மணிக்கும் உணரப்பட்டது. இLு ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவானது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால் அதே நேரத்தில் கடந்த முறையைப் போன்று சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டனர். இருந்த போதிலும் மீண்டும் தோன்றிய நில அதிர்வு காரணமாக வட மாநிலங்களில் பதற்றம் நிலவி வருகிறது. இதைத் தொடர்ந்து பேரிடர் மேலாண்மை மையத்தில் மத்திய அமைச்சரவை செயலாளர் அஜித் சேத் தலைமையில் நேற்று பிற்பகலில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதில் பிரதமர் அலுவலக அதிகாரிகள், உள்துறை, பாதுகாப்பு, வெளியுறவுத்துறை உயர்மட்ட அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.
மேலும் இந்தியாவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. உத்திரபிரதேசம், பீகார், மேற்குவங்கம் உள்ளிட்ட பகுதிகளில் 60க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் 237 பேர் படுகாங்களுடன் பல்வேறு பகுதிகளில் இருந்தும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். அதே போல் உத்தரபிரதேசத்தில் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்பு பணிகளை முதல்வர் அகிலேஷ் முடுக்கிவிட்டுள்ளார். மேலும் அவர் கூறுகையில், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்திற்கு தேவையான உதவிகளை செய்ய தயாராக உள்ளோம். இதற்காக 10 லாரிகள் மூலமாக தண்ணீர், உணவு பொட்டலங்கள், 10 லாரிகளில் பிஸ்கெட்டுகள் மற்றும் மருந்துகள் உள்ளிட்டவற்றை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றார்.
மேலும் மாநிலத்தில் பாதிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு மாவட்ட கலெக்டர்கள் விரைந்து சென்று நிவாரண பணிகளை விரைவுபடுத்தவும் அகிலேஷ் உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்காக 24 மணிநேரமும் இயங்கக் கூடிய அவசர உதவி அழைப்பு மையமும் அமைக்கப்பட்டுள்ளது.மேற்கு வங்கம் ,ஒடிசா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் நேற்றும் நில அதிர்வுகள் ஏற்பட்டன. உத்தரப்பிரதேச மாநிலத்தில் நில நடுக்கத்தில் இறந்தவர்களின் எண்ணிக் கை 13 ஆக அதிகரித்தது.நேற்று 8 வயது சிறுமி பலியானாள்.இதனை தொடர்ந்து பலி எண்ணிக்கை அந்தமாநிலத்தில் அதிகரித்தது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்11 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 6 hours ago |
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
24 Apr 2024கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி விமான நிலையத்தில், சிங்கப்பூரில் இருந்து நூதனமாக காலணியில் வைத்து தங்கத்தை கடத்தி வந்தவர் கைது
24 Apr 2024திருச்சி, திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் சிங்கப்பூரிலிருந்து நூதனமாக காலணியில் தங்கத்தை பதுக்கி எடுத்து வந்த நபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.