முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பார்லி. கூட்டம் முடிந்ததும் 9 மாநில கவர்னர்கள் மாற்றம் - ராஜ்நாத்சிங்

ஞாயிற்றுக்கிழமை, 26 ஏப்ரல் 2015      இந்தியா
Image Unavailable

புது டெல்லி: பாராளுமன்ற கூட்டம் முடிந்ததும் புதுவை உட்பட 9 மாநில கவர்னர்கள் மாற்றம் செய்யப்படுகின்றனர்.  பிரதமர் மோடி தலைமையில் மத்தியில் பாரதீய ஜனதா ஆட்சி அமைந்ததும் உத்தரபிரதேசம், மகராஷ்டிரா, கேரளா, கர்நாடகம், குஜராத், சண்டிகர், கோவா, ராஜஸ்தான், மேற்கு வங்காளம், அரியானா, நாகாலாந்து ஆகிய 11 மாநிலங்களுக்கு புதிதாக கவர்னர்கள் நியமிக்கப்பட்டனர்.

பீகார், பஞ்சாப், அசாம், இமாச்சல பிரதேசம், மேகாலயா, மிசோராம், மணிப்பூர், திரிபுரா, தெலுங்கானா, புதுச்சேரி ஆகியவைகளுக்கு கவர்னர்கள் நியமிக்கப்படாமல் இருந்தார்கள். பிற மாநில கவர்னர்கள் இவைகளை சேர்ந்து கவனித்து வந்தனர். இந்த நிலையில் இந்த 9 மாநிலங்களுக்கும் புதிதாக கவர்னர்களை நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பாராளுமன்ற கூட்டம் முடிந்ததும் இந்த 9 மாநிலங்களுக்கு கவர்னர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து