முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

6 மாதத்துக்குப் பிறகு பத்ரிநாத் கோயில் திறப்பு

திங்கட்கிழமை, 27 ஏப்ரல் 2015      ஆன்மிகம்
Image Unavailable

உத்தரகாண்ட் -  உத்தராகண்டில் புகழ்பெற்ற பத்ரிநாத் கோயில் 6 மாத குளிர் கால இடைவெளிக்குப் பிறகு நேற்று முன்தினம் காலை திறக்கப்பட்டது. இதன்மூலம் சார்தாம் எனப்படும் 4 புனிதத் தலங்களுக்கும் முழு வீச்சில் யாத்திரை தொடங்கியது. மாநில முதல்வர் ஹரீஷ் ராவத், சட்டப்பேரவை தலைவர் கோவிந்த் சிங் குஞ்வால் மற்றும் அரசு அதி காரிகள் முன்னிலையில், ஆயிரக் கணக்கான யாத்ரீகர்களின் கரகோஷங்களுக்கிடையே பத்ரிநாத் கோயிலின் கதவுகள் திறக்கப்பட்டன.

கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி கேதார்நாத் கோயில் உள்ளிட்ட நான்கு புனிதத் தலங்களும் கடல் மட்டத்திலிருந்து 10 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்திருப்பதால் கடும் பனிப்பொழிவு காரணமாக அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் மூடப்பட்டு மீண்டும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் திறக்கப்படுவது வழக்கம்.

கோயில்கள் திறந்திருக்கும் 6 மாத காலத்தில் நாட்டின் பல்வேறு மாநிலங்கள் மட்டுமல்லாது வெளி நாடுகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான யாத்ரீகர்கள் இந்த புனிதத் தலங்களுக்கு யாத்திரை மேற்கொள்வது வழக்கம்.

கடந்த 2013ம் ஆண்டு பெரும் மழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் நூற்றுக்கணக்கான யாத்ரீகர்கள் பலியானதை தொடர்ந்து அங்கு சாலைகள் சீரமைக்கப்பட்டு மீண்டும் யாத்திரை தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து