முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. சார்பில் ‘மே’ தின பேரணி: சிறப்பாக நடத்த ஜெயலலிதா உத்தரவு

திங்கட்கிழமை, 27 ஏப்ரல் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை: வரலாற்றுச் சிறப்புமிக்க "மே" தினத்தைக் கொண்டாடும் வகையில், அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், , வரும் 1-ம் தேதி "மே தினப் பேரணி" நடைபெறும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளரும், மக்களின் முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிவிப்பில், உழைக்கும் வர்க்கம் உரிமை பெற்ற திருநாள் "மே" தினம் என்றும், ஓய்வு என்பதும், மகிழ்வு என்பதும் உழைக்கும் தொழிலாளர்களுக்கும் உண்டு என்று உரிமைக் குரல் எழுப்பி அதில் வெற்றி பெற்ற நாள் "மே" தினம் என்றும், அந்த வெற்றியைத் தொடர்ந்து, உழைக்கும் தொழிலாளர்கள் ஒவ்வொருவரும் வாழ்க்கையில் அனைத்து வளங்களும் பெற்று சிறப்படைய வேண்டும்.

உலக முன்னேற்றத்திற்காகத் தங்கள் ரத்தத்தை வியர்வையாக்கி உழைக்கும் அனைத்துத் தொழிலாளர்களின் வாழ்விலும் நல்வாழ்வுத் தீபம் ஏற்றப்பட வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு உலகெங்கும் மே முதல் நாள் "மே" தின விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது - "மே" தினக் கொண்டாட்டங்கள் மூலம் தொழிலாளர்களின் பெருமையை உலகிற்கு பறை சாற்றுவதோடு நின்றுவிடாமல், உழைக்கும் தொழிலாளர்களின் உரிமைகள் உலகெங்கும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில், வரலாற்றுச் சிறப்பு மிக்க "மே'' தினத்தைக் கொண்டாடும் வகையில், கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும், புதுச்சேரி மாநிலத்திலும் வரும் 1-ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று "மே தினப் பேரணி" நடைபெறும்.

கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் தாங்கள் சார்ந்த மாவட்டங்களில் நடைபெறும் பேரணியில் கலந்து கொள்ள வேண்டும் - மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், சம்பந்தப்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர்களுடனும், நிர்வாகிகளுடனும், அண்ணா தொழிற்சங்கத்தின் இணைப்புச் சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகளுடனும்; கழகம், எம்.ஜி.ஆர். மன்றம், ஜெ ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளுடனும், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளுடனும் இணைந்து "மே" தினப் பேரணியை சிறப்பாக நடத்திட வேண்டும்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

கழகத்தின் சார்பில் "மே தின பேரணி" நடைபெற உள்ள இடங்கள் மற்றும் அவற்றிற்கு தலைமை ஏற்போர் பட்டியலை.அ.தி.மு.க. வெளியிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து