முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாட்டு இறைச்சி சாப்பிட்டு ராகுல் கேதார்நாத் கோவிலுக்கு சென்றதால் பூகம்பம் ஏற்பட்டது: பா.ஜ. எம்.பி. கிண்டல்

செவ்வாய்க்கிழமை, 28 ஏப்ரல் 2015      அரசியல்
Image Unavailable

ஹரித்துவார்: ராகுல் காந்தி மாட்டு இறைச்சி சாப்பிட்டு கேதார்நாத் கோவிலுக்கு சென்றதால் பூகம்பம் ஏற்பட்டதாக எம்.பி.கிண்டல் செய்துள்ளார்.

உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சாமியார் சாக்ஷி மகாராஜ். இவர் உன்னாவ் தொகுதியில் இருந்து பாஜ சார்பில் பாராளுமன்றத்துக்கு தேர்ந்து எடுக்கப்பட்டார். அடிக்கடி மது தொடர்பான கருத்துக்களை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கினார். காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் கேதார்நாத் பயணம் குறித்து தற்போது மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் ஹரித்துவாரில் நேபாள பூகம்பம் குறித்து நிரூபர்களிடம் கூறும்போது, ராகுல்காந்தி மாட்டு இறைச்சி சாப்பிட்டு விட்டு புனிதமான கேதார்நாத் கோவிலுக்கு சென்றார். இதனால் தான் நேபாளத்தில் பூகம்பம் ஏற்பட்டது என்றார். மேலும் இந்துக்களின் ஜனத்தொகையை பெருக்க ஒவ்வொரு இந்து பெண்ணும் 4 குழந்தைகள் பெறவேண்டும் என்றும் சாக்ஷி மகராஜ் கூறினார். அவரது இந்த கருத்துக்கள் மீண்டும் சர்ச்சைக்குள்ளாகு இருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து