முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

20 தமிழர்கள் சுட்டுக் கொலை: 60 நாட்களுக்குள் விசாரணையை முடிக்க வேண்டும்: ஆந்திர ஐகோர்ட் உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 28 ஏப்ரல் 2015      இந்தியா
Image Unavailable

ஐதராபாத்: 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் ஆந்திர போலீஸ் விசாரணை திருப்தி அளிக்கவில்லை என்று ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்துள்ளது.

திருப்பதி வனப் பகுதியில் செம்மரக் கட்டை வெட்டி கடத்தியதாக 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதுபற்றி சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிடக்கோரி சிவில் உரிமை கழகமும், கொல்லப்பட்ட சசிகுமாரின் மனைவி முனியம்மாள் ஆகியோர் ஆந்திர ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு நேற்று ஆந்திர ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரணை தொடர்பான போலீசாரின் டைரி கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. அதை படித்து பார்த்த நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

10 நாட்களுக்கு முன்பு சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்ட பின்பும் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லாதது அதிருப்தி அளிக்கிறது என்று நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். தற்போது நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு விசாரணைக்குழு தலைவர் மீது ஏற்கெனவே பல என்கவுண்டர் புகார்கள் இருப்பதாக கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. இதை கவனத்தில் கொண்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை நேற்றும் 60 நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இதில் போலீஸ் விசாரணையை துரிதப்படுத்த வேண்டும், சிறப்பு அரசு வக்கீலை நியமிக்கக் கூடிய நிலையை ஏற்படுத்த வேண்டாம் என்றும் கோர்ட்டு எச்சரித்தது. அடுத்த வழக்கு விசாரணை வருகிற மே 1ம் தேதிக்குள் தள்ளி வைக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து