முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீட்புப்பணிகள் நிறுத்தம் :புதைந்த உறவினர்களை தாங்களே தேடும் குடும்பத்தினர்

செவ்வாய்க்கிழமை, 28 ஏப்ரல் 2015      இந்தியா
Image Unavailable

காத்மாண்டு:  நேபாளத்தில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் புதையுண்ட மக்களை தேடும் பணியில் மீட்புக்குழுவினர்  ஈடுபட்டுவருகின்றனர், நேற்று அங்கு கடும் மழை பெய்ததால் தேடும் பணி நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் புதையுண்ட தங்கள் உறவினர்களை தாங்களே தேடும் பணியில் குடும்பத்தினர் ஈடுபட்டனர். இந்த பரிதாப நிலை நெஞ்சை நெகிழ்விப்பதாக இருந்தது.

இந்த நிலையில் வீடுகளை பறிகொடுத்த மக்கள் பலருக்கும் தார்பாய் கூடாரம் கிடைக்கவில்லை.இதனால் அவர்கள் கொட்டும் மழையில் திறந்த வெளியில் நனைந்த படி அமர்ந்து இருந்தனர். நேபாள நில நடுக்கத்தின் போது சிக்கிய 20 தமிழர்கள் நேற்று பத்திரமாக தமிழகம் வந்து சேர்ந்தனர். தாங்கள் நலமுடன் திரும்ப நடவடிக் கை எடுத்த தமிழக அரசுக்கு அவர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து