முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நான் இந்து, முஸ்லீம்: ஜோத்பூர் கோர்ட்டில் நடிகர் சல்மான்கான் வாக்குமூலம்

வியாழக்கிழமை, 30 ஏப்ரல் 2015      சினிமா
Image Unavailable

ஜோத்பூர் - ஜோத்பூர் நீதிமன்றத்தில் நான் ஒரு இந்து மற்றும் முஸ்லிம் என்று நீதிபதியிடம் தெரிவித்தார் நடிகர் சல்மான்கான்.
கடந்த 1998 ஆம் ஆண்டு நடிகர் சல்மான்கான் படப்பிடிப்புக்கு சென்ற போது மானை வேட்டையாடியதாக குற்றம் சாட்டப்பட்டு இது
தொடர்பான வழக்கு ஜோத்பூர் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்காக நடிகர் சல்மான்கான் நேற்று முன்தினம் ஜோத்பூர் கோர்ட்டில் ஆஜரானார்.  பூட்டிய அறையில் நடிகரின் வக்கீல் மட்டும் அனுமதிக்கப்பட்ட நிலையில் நீதிபதி அனுபமா பிஜிலானி முன்னிலையில் விசாரணை நடைபெற்றது.

அப்போது நீதிபதி அவரிடம் உங்கள் பெயர், தந்தை பெயர் மற்றும் உங்கள் தொழில், சாதி போன்ற விவரங்களை அளிக்க கேட்டுக் கொண்டார். அதற்கு பதில் அளித்த நடிகர் சல்மான்கான் முதலில் நான் இந்தியன் என பதில் அளித்தார். பின்னர் நீதிபதி என்ன சாதி என்று மீண்டும் அவரிடம் திருப்பி கேட்டார்.

அதற்கு பதில் அளித்த நடிகர் சல்மான்கான் நான், இந்து மற்றும் முஸ்லிம் என பதில் அளித்தார். அதுகுறித்து விளக்குமாறு தொடர்ந்து நீதிபதி கேட்கவே, எனது தந்தையான பிரபல எழுத்தாளர் சலீம்கான் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர். எனது தாயார் சுசீலா கார்க் இந்து மதத்தை சேர்ந்தவர் என சல்மான் அதற்கு விளக்கம் அளித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து