எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொல்கத்தா - நடப்பு 8-வது ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கொல்கத்தா அணியின் தொடக்க வீரர் உத்தப்பா 80 ரன்களுடனும் ரஸ்ஸல் 55 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் கொல்கத்தா வெற்றிக்கு வித்திட்டனர். இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் கவுதம் காம்பீர் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனால் சென்னை அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. சென்னையின் தொடக்க வீரர்களாக ஸ்மித், மெக்கல்லம் களமிறங்கினர்.
கம்மின்ஸ் வீசிய முதல் ஓவரின் முதல் பந்தில் ஸ்மித் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து ரெய்னா களமிறங்கினார். தொடக்க வீரரான மெக்கல்லம் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சுரேஷ் ரெய்னா 8 ரன்களை எடுத்த நிலையில் 3.3வது ஓவரில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அப்போது சென்னை அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 43 ரன்கள் எடுத்திருந்தது.சென்னையின் முன்வரிசை வீரர்கள் நிலைத்து நின்று ஆடாமல் அடுத்தடுத்து வெளியேறினர். 5.5வது ஓவரில் 11 பந்துகளில் 20 ரன்கள் எடுத்திருந்த டூபிளெஸிஸ்ஸும் அவுட் ஆனார்.
இதனைத் தொடர்ந்து கேப்டன் டோணி களத்துக்கு வந்தார். டோணி 4 பந்துகளை எதிர்கொண்டு ஒரே ஒரு ரன் எடுத்த நிலையில் கிளீன் போல்டு அவுட் ஆனார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6.5வது ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 72 ரன்கள் எடுத்து தடுமாறியது.பின்னர் பிராவோ-ஜடேஜா ஜோடி சற்று நிலைத்து நின்று ரன்களை விறுவிறுவென குவித்தது. சென்னை அணி 16.3வது ஓவரில் 129 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பிராவோ அவுட் ஆனார்.
அவர் 32 பந்துகளில் 30 ரன்களில் எடுத்திருந்தார். சென்னை அணியின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து மீண்டும் விழுந்தன. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தட்டுத் தடுமாறி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 165 ரன்களை எடுத்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெல்ல 166 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.கொல்கத்தா அணியில் பிராட் ஹக் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். ரஸ்ஸல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.பின்னர் கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக உத்தப்பாவும் கேப்டன் காம்பீரும் களமிறங்கினர். இருவரும் நிலைத்து நின்று ரன்களை எடுத்து வந்தனர்.4.2வது ஓவரில் மொகித் சர்மா வீசிய பந்தில் காம்பீர் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அவர் 16 பந்துகளில் 19 ரன்கள் எடுத்திருந்தார். அப்போது கொல்கத்தா அணி 4.2 ஓவர் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 33 ரன்களை எடுத்திருந்தது.
இதனைத் தொடர்ந்து மணீஷ் பாண்டே 3 ரன்கள் எடுத்த நிலையில் 8.2வது ஓவரில் அவுட் ஆனார். அடுத்த 9.1வது ஓவரில் யாதவ் 2 ரன்கள் எடுத்த நிலையில் நடையைக் கட்டி கொல்கத்தா போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.ஆனால் தொடக்க வீரரான உத்தப்பாவுடன் கை ரஸ்ஸல் கை கோர்த்த பின்னர் இந்த ஜோடியை பிரிக்க சென்னை பெரும் போராட்டம் நடத்தியது. இருப்பினும் கடைசி 4 ஓவர்களில் முதல் 2 ஓவர்கள் அதிக ரன்களை விட்டுக் கொடுத்தது.வழக்கம் போல கடைசி 2 ஓவர்கள் டென்ஷன் ஓவர்களாக மாறியது. அதுவும் கடைசி ஓவர் படு த்ரில்லாக அமைந்தது.
கடைசி ஓவரின் 5வது பந்தில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை கடந்தது கொல்கத்தா அணி. கொல்கத்தா அணி 19.5 ஓவரில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 169 ரன்களை எடுத்திருந்தது. இதன் மூலம் 7 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. தொடக்க வீரர் உத்தப்பா 80 ரன்களுடனும் ரஸ்ஸல் 55 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் கொல்கத்தா அணி வெற்றிக்கு வித்திட்டனர்.
நடப்பு ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு இது 4வது வெற்றியாகும். பிராட் ஹக், உத்தப்பா, ரஸ்ஸல் ஆகியோரின் அபாரமான ஆட்டத்தால் கொல்கத்தா வெற்றியை ருசித்தது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 18 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 18 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
செல்வகணபதி மீது மேலும் ஒரு புகார்: சேலம் தி.மு.க. வேட்பாளர் வேட்புமனு ஏற்கப்படுமா?
28 Mar 2024சேலம், சேலம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு பரிசீலனையின் போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.