முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி கோவிலில் தினமும் 6 லட்சம் லட்டுகள் தயாரிப்பு

திங்கட்கிழமை, 4 மே 2015      ஆன்மிகம்
Image Unavailable

நகரி, கோடை கால விடுமுறையையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். பக்தர்கள் கூட்டத்தை சமாளிக்க தேவஸ்தானம் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்து இருப்பதாக தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி சாம்பசிவராவ் கூறினார்.

பக்தர்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் லட்டு பிரசாதம் கிடைக்கும் வகையில் தினமும் 6 லட்சம் லட்டுகள் தயாரிக்கப்பட உள்ளது. மேலும் கூடுதல் லட்டுக்கான டோக்கன் தரிசன வரிசையிலே வழங்கப்படவுள்ளது. இதன் மூலம் பக்தர்கள் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இதே போல் முடி காணிக்கை செய்யும் கல்யாண கட்டாவில் பக்தர்கள் காத்திருப்பதை தவிர்க்க 950 நாவிதர்கள் பணி அமர்த்தப்படுகிறார்கள். வி.ஐ.பி. தரிசன நேரத்தை குறைத்து சாதாரண பக்தர்கள் தரிசனத்துக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று அதிகாரி சாம்பசிவராவ் தெரிவித்தார். திருமலையில் நேற்று முன்தினம் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை 59,819 பக்தர்கள் மூலவரை தரிசனம் செய்தனர். அதன் பிறகு 27 கம்பார்ட்மென்டுகளில் பக்தர்கள் காத்து நின்றனர். இவர்கள் தரிசனத்துக்கு 10 மணி நேரமானது. கால்நடையாக வந்த பக்தர்கள் தரிசனத்துக்கு 7 மணி நேரம் காத்து நின்றனர். நேற்று முன்தினம் ஒரு நாள் உண்டியல் வருமானமாக ரூ. 2.94 கோடி வசூலானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து