முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரான்ஸ் பாதுகாப்புத்துறை அமைச்சர், நாளை இந்தியா வருகை

திங்கட்கிழமை, 4 மே 2015      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: பிரான்ஸ் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜீன்-வெஸ் டிரையன் நாளை(மே6)இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.இந்த பயணத்தின் போது விமானப்படைக்கு தேவையான ரபேல் போர்விமானங்களை வாங்குவது தொடர்பாக பேச்சு வார்த்தை நடைபெறும். 600கோடி டாலர்  கோடி மதிப்பில் வாங்கப்படும் இந்த போர்விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் விரைவில் நிறைவடையும் என இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்தார். இந்த ஒப்பந்தம் குறித்து அவர் கூறியதாவது:

பிரான்ஸ் நாட்டில் இருந்து ரபேல்  போர் விமானங்களை வாங்குவதற்கு அரசு ஒரு கமிட்டியை அமைக்கிறது.இதனைத்தொடர்ந்து இந்த மாதத்தில் எந்த நேரத்திலும் போர் விமானங்களை பிரான்சிடம் இருந்து வாங்குவதற்கு பேச்சு வார்த்தை துவங்கும்,இதற்கான ஒப்பந்தம் விரைவில் நிறைவடையும். போர் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்த தேதியை நிர்ணயிக்க எந்த காலகெடுவும் குறிப்பிடப்படவில்லை. போர் விமானங்கள் வாங்குவது தொடர்பாக ஏற்கனவே அமெரிக்கா,இஸ்ரேல், ரஷ்யா, ஆகிய நாடுகளுடனும் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பிரான்ஸ் பாதுகாப்புத்துறை அமைச்சர் நாளை(மே6) புதுடெல்லி வருகிறார்.ரபேல் போர்விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தை முடிவு செய்வதற்காகவே அவரது இந்த இந்திய பயணம் அமைந்துள்ளது. பிரதமர்  நரேந்திர மோடி கடந்த மாதம் பிரான்சிற்கு பயணம் மேற்கொண்டார்.அப்போது 600கோடி டாலர் மதிப்பில்  ரபேல் ஜெட் போர் விமானங்களை பிரான்சிடம் இருந்து வாங்குவதற்கான ஒப்புதலில் கையெழுத்திட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து