முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை போக்குவரத்துக்காவல்துறைக்கு புதிய துணைக்கமிஷனர் ஏ.ஜி. பாபு நியமனம் சென்னை உளவுத்துறைக்கும் புதிய டி.சி.

திங்கட்கிழமை, 4 மே 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை: மதுரை மாநகர போக்குவரத்துக்காவல் துறைக்கு புதிய துணைக்கமிஷனராக ஏ.ஜி.பாபு நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை மாநகர உளவுத்துறை துணைக்கமிஷனராக முகமது இக்பால் மாற்றப்பட்டுள்ளார். தமிழக காவல்துறையில் உயர் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை உள்துறை செயலாளர் அபூர்வ வர்மா பிறப்பித்துள்ளார். சென்னை மாநகரில் கீழ்ப்பாக்கம் துணைக்கமிஷனர் ஆர்.ராதாகிருஷ்ணன் மாற்றம் செய்யப்பட்டு, கிருஷ்ணகிரி போச்சம்பள்ளி தமிழ்நாடு சிறப்பு காவல் படை கமாண்ட்ண்ட்டாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே அந்த பணியில் இருந்த குணசேகரன் ஆவடியில் ரெஜிமெண்டல் மையத்தில் கமாண்ட்ண்ட் ஆக பணியமர்த்தப்பட்டுள்ளார்.

சேலம் மாநகர சட்டம் ஒழுங்கு துணைக்கமிஷனராக ஏ.ஜி. பாபு, மாற்றம் செய்யப்பட்டு , மதுரை மாநகர போக்குவரத்துக்காவல்துறை துணைக்கமிஷனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மணிமுத்தாறு 12 வது பட்டாலியன் துணை கமாண்ட்ண்ட் எஸ்.செல்வராஜ், கண்காணிப்பு அதிகாரியாக பதவி உயர்வு சேலம் மாநகர சட்டம் ஒழுங்கு துணைக்கமிஷனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். லஞ்ச ஊழல் தடுப்பு மற்றும் விழிப்பு இயக்ககத்தின் கூடுதல் கண்காணிப்பாளராக இருந்த எஸ்.எம். முகமது இக்பால், கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்று சென்னை மாநகர காவல்துறை உளவு பிரிவு துணைக்கமிஷனராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

விழுப்புரம் தலைமையிட காவல்துறையின் கூடுதல் கண்காணிப்பாளர் பி.ராஜன், கண்காணிப்பாளர் பதவி உயர்வு பெற்று திருநெல்வேலி மாநகர குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்து துணைக்கமிஷனராக அமர்த்தப்பட்டுள்ளார்.  கோவை மாநகர சட்டம் ஒழுங்கு துணைக்கமிஷனராக இருந்த பிரவேஸ் குமார் ஐபிஎஸ் மாற்றம் செய்யப்பட்டு, சென்னை கீழ்ப்பாக்கம் காவல்துறை துணைக்கமிஷனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேற்கண்டவாறு அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து