முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசு கலைக்கல்லூரிகளில் விண்ணப்ப வினியோகம் துவங்கியது

திங்கட்கிழமை, 4 மே 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை:  தமிழகம் முழுவதும் நேற்று அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் துவங்கி உள்ளது. சென்னையில் ராணிமேரி கல்லூரி, காயிதே மில்லத் கல்லூரி ஆகியவற்றில் விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டன. மாணவர்கள் விண்ணப்பங்களை பெற நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கிச்சென்றனர்.

தமிழகம் முழுவதும் மொத்தம் 62 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பம் வினியோகம் நேற்று துவங்கி நடைபெற்று வருகிறது. சென்னையில் மொத்தம் 4 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளன. நேற்று ராணி மேரி கல்லூரியிலும் காயிதே மில்லத் கல்லூரியிலும் விண்ணப்பம் வழங்கப்பட்டன. நாளை நந்தனம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, செல்லம்மாள் கல்லூரி ஆகியவற்றில் விண்ணப்பம் வழங்கப்படுகிறது. விண்ணப்பத்தின் விலை 27 ரூபாயாகும். தாழ்த்தப்பட்ட பழங்குடி இன மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து