முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விருதுநகர் மாவட்ட அதிமுக தொண்டர் மரணம் :குடும்ப நல நிதியாக ரூ 3 லட்சம் உதவி ஜெயலலிதா அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 5 மே 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை - தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டவிருதுநகர் மாவட்ட அதிமுக தொண்டர் குடும்பத்திற்கு அதிமுக சார்பில் ரூ 3 லட்சம் குடும்ப நலநிதி வழங்கப்படும் என்று அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். அதிமுக தொண்டர்கள் உணர்ச்சிவயப்படாமல் நிதானம் காக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை:
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைமை மீது மிகுந்த பேரன்பு கொண்டு தற்போது எனக்கு ஏற்பட்டிருக்கும் இடர்பாடுகளை நினைத்து உள்ளம் வெதும்பி, விருதுநகர் மாவட்டம், சாத்தூர் மேற்கு ஒன்றியம்  சிந்துவம்பட்டி கிளைக்கழக செயற்குழு உறுப்பினர் எஸ்.கந்தசாமி, தூக்கிட்டு தன் உயிரை மாய்த்து கொண்டார் என்ற செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியுற்றேன் என் உயிரினும் மேலான எனதருமை கழக உடன்பிறப்புக்கள் உணர்ச்சி வயப்படாமல் நிதானம் காக்குமாறு மீண்டுமந் அன்பு கட்டளையிடுகிறேன்.அன்புசகோதரர்  கந்தசாமியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதோடு, அன்னாரது ஆன்மாசாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். மேலும் அவரது குடும்பத்திற்கு அதிமுக சார்பில் குடும்ப நலநிதி உதவியாக ரூ 3 லட்சம் வழங்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து