முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சல்மான் கைது: பாலிவுட்டில் ரூ.200 கோடி முடங்கும்

வியாழக்கிழமை, 7 மே 2015      சினிமா
Image Unavailable

மும்பை, பாலிவுட்டில் கடந்த 25 ஆண்டுகளாக வெற்றிகரமாக வலம் வருகிறார் சல்மான் கான். அவருடைய பல படங்கள் அமோக வெற்றி பெற்றுள்ளன.

இப்போதும் அவரை நம்பி பாலிவுட்டில் பல தயாரிப்பாளர்கள் படம் எடுத்து வருகின்றனர். கரீனா கபூருடன் இணைந்து, பஜ்ரங்கி பைஜான், சோனம் கபூருடன் பிரேம் ரத்தன் தான் பாயோ ஆகிய படங்கள் முடியும் தருவாயில் உள்ளன.

இதுகுறித்து பாலிவுட் விமர்சகர் அமோத் மெஹ்ரா என்பவர் கூறுகையில், கார் விபத்து வழக்கு தீவிரமாக நடந்து வந்த போது கூட, சல்மான் கான் மீது மிகுந்த நம்பிக்கையுடன் பலர் முதலீடு செய்து படம் எடுத்தனர். வழக்கில் அவருக்கு எதிராக தீர்ப்பு வராது என்று தான் நம்பினர். ஆனால், அவர்கள் நம்பிக்கை பொய்த்து விட்டது என்றார்.

தவிர தபாங் 3, என்ட்ரி மெய்ன் நோ என்ட்ரி உட்பட 4 புதிய படங்களில் நடிக்க சல்மான் கான் ஒப்புக் கொண்டுள்ளதாக மெஹ்ரா கூறுகிறார். ஒட்டு மொத்தமாகப் பார்க்கும் போது, தற்போதைக்கு சல்மான் கானை நம்பி பாலிவுட்டில் ரூ. 200 கோடிக்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது. அவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால், அந்தப் பணம் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்று கோமல் நஹடா கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து