முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெங்களூர் அணிக்கு 5வது வெற்றி: பந்துவீச்சாளர்களுக்கு கோலி பாராட்டு

வியாழக்கிழமை, 7 மே 2015      விளையாட்டு
Image Unavailable

பெங்களூர் - கிறிஸ்கெய்லின் அதிரடியில் பஞ்சாப் அணியை வீழ்த்தி பெங்களூர் 5வது வெற்றியை பெற்றது. முதலில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 226 ரன் குவித்தது. கிறிஸ்கெய்ல் 57 பந்தில் 117 ரன்னும், டிவில்லியர்ஸ் 24 பந்தில் 47 ரன்னும் எடுத்தனர்.

சந்தீப்சர்மா 2 விக்கெட் கைப்பற்றினார். பின்னர் விளையாடிய கிங்ஸ்லெவன் பஞ்சாப் 13.4 ஓவரில் 88 ரன்னில் சுருண்டது. இதனால் 138 ரன்னில் பெங்களூர் அணி அபார வெற்றி பெற்றது. அக்சர்பட்டேல் அதிகபட்சமாக 40 ரன் எடுத்தார். ஸ்டார்க், அரவிந்த் தலா 4 விக்கெட் கைப்பற்றினார்கள். வெற்றி குறித்து பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி கூறியதாவது, கிறிஸ்கெயிலின் அதிரடியான ஆட்டமும் பந்துவீச்சும் அபாரமாக இருந்தது. இந்த இரண்டுமே வெற்றிக்கு காரணமாக இருந்தது.

வீரர்களின் ஆட்டம் என்னை மெய்சிலிர்க்க வைத்தது. பெங்களூர் அணியை யாரும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு இந்த ஆட்டம் அமைந்தது. இதே சிறப்பான நிலை தொடர வேண்டும் என்பதை விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார். 10வது ஆட்டத்தில் 5 வெற்றியை பெற்ற பெங்களூர் அணி 11வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்சை வருகிற 10ம் தேதி எதிர்கொள்கிறது. கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி 8வது தோல்வியை தழுவியது. அந்த அணி அடுத்த ஆட்டத்தில் கொல்கத்தாவை நாளை 9ம் தேதி எதிர்கொள்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து