முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் இருந்து திருப்பதிக்கு தினமும் சுற்றுலா பஸ்: ரூ.1500 கட்டணத்தில் செல்லலாம்

புதன்கிழமை, 13 மே 2015      ஆன்மிகம்
Image Unavailable

சென்னை: தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், மக்கள் பயன்பெறும் வகையில் பல சுற்றுலாக்களை ஏற்பாடு செய்து வருகிறது. அதில் திருப்பதிக்கு இரவு மற்றும் பகல் நேரங்களில் சுற்றுலா பஸ்களை இயக்க ஏற்பாடு செய்துள்ளது. இந்த சுற்றுலா பஸ் காலை 5 மணிக்கு திருவல்லிக்கேணியில் உள்ள தலைமை அலுவலகத்திலிருந்து புறப்பட்டு அன்று இரவு 9 மணிக்கு சென்னை வந்தடையும். இந்த சுற்றுலா அனைத்து வார நாட்களிலும் இயக்கப்படுகிறது. (காலை மற்றும் இரவு) மேலும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் பஸ் இயக்கப்படுகிறது.

சுற்றுலா பயணிகள் காலையில் திருமலை அடைந்தவுடன் பெருமாளை தரிசித்து விட்டு, திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயாரை தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதே போல் இரவு 10.30 மணிக்கு திருவல்லிக்கேணி தலைமை அலுவலகத்திலிருந்து புறப்பட்டு மறுநாள் இரவு 6 மணிக்கு சென்னை வந்தடையும். இந்த சுற்றுலா அனைத்து வார நாட்களில் இயக்கப்படுகிறது. சுற்றலா பயணிகள் காலை திருமலை அடைந்தவுடன் பெருமாளை தரிசித்து விட்டு, திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயாரை தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒரு நபருக்கு கட்டணம் ரூ. 1500 ஆகும். குழந்தைகளுக்கு ரூ. 1200 வசூலிக்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு 25384444/ 2538 3333/ 2538 9857 ஆகிய தொலை பேசி எண்களை தொடர்பு கொண்டு விவரம் அறியலாம். இ.மெயில்: [email protected] ஆன்–லைன் பதிவு: www.ttdconline.com மொபைல் பதிவு: www.mttdonline.com.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து