முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பஞ்சப்பிரகார விழா - சமயபுரம் மாரியம்மனுக்கு மகா அபிஷேகம்

வியாழக்கிழமை, 14 மே 2015      ஆன்மிகம்
Image Unavailable

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சப்பிரகார விழா கடந்த 6ம் தேதி துவங்கியது. 9ம் திருநாளான நேற்று இரவு 9 மணியளவில் அம்மன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார். முக்கிய நிகழ்ச்சியான மகா அபிஷேகம் இன்று நடக்கிறது.
அதிகாலை வடதிருகாவிரி என்று அழைக்கப்படும் கொள்ளிடம் ஆற்றில் இருந்து ஒரு தங்க குடம், 25 வெள்ளிக்குடங்களில் திருமஞ்சன நீர் எடுத்து யானை மீது தங்க குடத்தை வைத்து ஊர்வலமாக கோயிலுக்கு கொண்டு செல்கின்றனர். மதியம் 1 முதல் மாலை 5 மணிவரை திருநீர், நெய், பால், தயிர், கரும்புசாறு, மா, வாழை மற்றும் வாசனை திரவியங்களால் அம்மனுக்கு பலவகை அபிஷேகம் நடைபெறவுள்ளது. திரளான பக்்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்யவுள்ளனர்.

மாலை 6 மணிக்கு அம்மனுக்கு பூச்சாத்துப்படி நடக்கிறது. நள்ளிரவு 12 மணிக்கு அம்மன் வெள்ளிக்கேடயத்தில் வெண்ணிற பாவாடை அணிந்து எழுந்தருளுகிறார். 5 பிரகாரங்களிலும் வீதி உலா வருகிறார். விழா தொடர்ந்து 20ம் தேதி வரை நடைபெறுகிறLு. இதில் அம்மன் தினமும் இரவு தங்க சிம்மம், முத்துப் பல்லக்கு, தங்க கமலம், வெள்ளிக்குதிரை, வெள்ளிக்காமதேனு ஆகிய வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வருகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து