முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதியில் கட்டுக்கடங்காத கூட்டம் : தரிசனத்துக்கு 20 மணி நேரமாகிறது

சனிக்கிழமை, 16 மே 2015      ஆன்மிகம்
Image Unavailable

நகரி - ஆந்திர அரசு பஸ் ஊழியர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தம் காரணமாக திருப்பதி கோவிலில் பக்தர்கள் கூட்டம் குறைவாக இருந்தது. இப்போது ஸ்டிரைக் வாபஸ் ஆனதால் ஒருவாரத்துக்கு பிறகு திருப்பதி கோவிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. நேற்று முன்தினம் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. தர்ம தரிசனத்துக்கு செல்லும் 33 கம்பார்ட்மெண்டுகளும் நிரம்பி வழிந்தது. மேலும் கோவிலுக்கு வெளியே மூன்றரை கிலோ மீட்டர் தூரத்துக்கு பக்தர்கள் வரிசையில் காத்து நின்றனர். இவர்கள் தரிசனம் செய்ய 20 மணி நேரமானது.

கால்நடையாக வந்த பக்தர்கள் தரிசனத்துக்கு 12 மணி நேரம் காத்து நின்றனர். 2வது வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. பக்தர்கள் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர். இதில் குழந்தைகள், பெண்கள் கீழே விழுந்து காயம் அடைந்தனர். நேற்று சனிக்கிழமை என்பதால் பக்தர்கள் வருகை மேலும் அதிகரித்தது. கோவிலில் நேற்று ஒரு நாள் உண்டியல் வருமானமாக ரூ. 1.94 கோடி கிடைத்தது. இது தவிர தேவஸ்தான டிரஸ்டுக்கு ரூ. 25.5 லட்சம் நன்கொடையாக கிடைத்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து