முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க வான்வழி தாக்குதல்: பாகிஸ்தானில் 5 தீவிரவாதிகள் பலி

ஞாயிற்றுக்கிழமை, 17 மே 2015      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் தீவிரவாதிகள் மீது அமெரிக்க ராணுவத்தினர் நடத்திய வான்வழி தாக்குதலில் 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

 பாகிஸ்தானின் வஜ்ரிஸ்தான் பகுதியில் தாலிபான்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். ஆப்கான் எல்லையை ஒட்டியுள்ள இந்த பகுதியில் தீவிரவாதிகளின் அட்டூழியம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தீவிரவாதிகளின் புகலிடமாக வஜ்ரிஸ்தான் உள்ளது. இங்கு தீவிரவாதத்தை ஒடுக்க பாகிஸ்தான் அரசு, அமெரிக்க ராணுவம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. அவ்வப்பொழுது தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

இன்நிலையில், வஜ்ரிஸ்தான் பகுதியில் நேற்று அமெரிக்க ராணுவத்தினர் வான்வழி தாக்குதல் நடத்தினர். இதில் பாகிஸ்தானை சேர்ந்த 2 பேர் உட்பட 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டன. தீவிரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டன. ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வஜ்ரிஸ்தான்  பகுதியில் தீவிரவாதிகளை பிடிக்க பாகிஸ்தான் ராணுவம் கடும் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. கடந்த ஓராண்டாக இப்பகுதியில் தீவிர தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதாகவும், அவர்கள் துன்புறுத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து