எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட சட்டப் போராட்டத்தில் பெற்ற வெற்றி மூலம் ஜெயலலிதா தமிழகத்தின் மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்துள்ளார் என்றும், இந்த வாரத்தில் ஜெயலலிதா மீண்டும் அரியணையில் அமர்வார் என்றும், தனது அளவற்ற சாதனைகளின் மூலம் 2016ம் ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலிலும் அவர் அமோக வெற்றி பெறுவார் என்றும் பிரபல ஆங்கில பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகருமான பிரபு சாவ்லா கணித்துள்ளார்.
மேலும் தமிழகத்திலும் சரி, இதர மாநிலங்களிலும் சரி லட்சக்கணக்கான தொண்டர்களை கொண்டது அதிமுக எனும் மாபெரும் இயக்கம் என்றும் அவர் கூறியுள்ளார். இது குறித்து பிரபல பத்திரிகையாளரும் அரசியல் விமர்சகருமான பிரபு சாவ்லா ஒரு ஆங்கில நாளிதழில் எழுதியிருக்கும் கட்டுரை வருமாறு,மக்களின் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிறிது காலம் இடர்பாடு ஏற்பட்டிருந்த போதிலும் தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் அதிமுக தொண்டர்கள் மத்தியிலும் பொதுமக்களிடையேயும் அவருக்கான செல்வாக்கு எள்ளளவும் குறையவில்லை. மக்களின் முதல்வர் ஜெயலலிதா வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டது குறித்து எதிர்க்கட்சியினர் மிகுந்த மனச்சோர்வு அடைந்திருக்கின்றனர். எதிர்க்கட்சியினர் கேள்விகள் எழுப்பலாம். ஆனால் தன்னிரகற்ற எவராலும் வெல்ல முடியாத மக்கள் செல்வாக்கினை ஜெயலலிதா பெற்றிருக்கிறார் என்பது தான் நிதர்சனமான உண்மை. மக்களின் முதல்வர்ஜெயலலிதா வழிகாட்டுதலின்படி செயல்படும் லட்சக்கணக்கான தொண்டர்களும் ஆதரவாளர்களும் மக்களின் முதல்வரின் உறுதி நிறைந்த செயல்பாடுகளில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருக்கின்றனர்.
அவரது அளப்பரிய திறமையின்மீது நம்பிக்கை கொண்டுள்ள மக்கள் ஜெயலலிதா சிறப்பான அரசை நிறுவுவார் என்பதிலும் உறுதியாக உள்ளனர். அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதாவை வழக்கில் இருந்து விடுவித்து கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த உடனேயே பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்ததை மரியாதை நிமி்த்தமாக மட்டுமே எடுத்துக்கொள்ள முடியாது.சட்டப் போராட்டத்தில் வெற்றி பெற்ற ஒரு மாநிலத்தின் முதல்வருக்கு பிரதமர் வாழ்த்து தெரிவிப்பது மிகவும் அரிதான செயலாகும். தமிழக அளவிலும் அகில இந்திய அளவிலும் மக்களின் முதல்வர் ஜெயலலிதா பெற்றிருக்கும் முக்கியத்துவத்தை பிரதமர் மோடி நன்கு அறிந்து வைத்திருக்கிறார். 2016ம் ஆண்டு நடைபெறவிருக்கும் தமிழக சட்டபேரவைத் தேர்தலிலும் ஜெயலலிதா மகத்தான வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைப்பார் என்பதை இது போன்ற நிகழ்வுகள் உறுதிபட எடுத்துக்காட்டுகின்றன.
கடந்த சட்டமன்ற தேர்தலின் போது ஜெயலலிதா அளித்த 170 க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளார் என்பதை மக்களும் அறிவார்கள். ஜெயலலிதா தனித்துவம் மிக்க நிரவாகத்தை மேற்கொண்டுள்ளார். அவரது நிர்வாக இலக்கு மற்றும் கொள்கைகள் அனைத்தும் தமிழக மக்களின் நலன் ஒன்றே அவரது கொள்கை என்பதை தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. மக்கள் நலத்திட்டங்களில் ஏழை எளிய மற்றும் ஆதரவற்ற மக்கள் முன்னுரிமை பெற்றுள்ளனர். தமது நீண்ட நெடிய அரசியல் வாழ்வில் தமிழக மக்களின் சமூக பொருளாதார மற்றும் அரசியல் சூழ்நிலைகளை மக்களின் முதல்வர் ஜெயலலிதா மிகத்தெளிவாக அறிந்து வைத்திருக்கிறார்.
சத்துணவுத்திட்டத்தின் பொறுப்பாளராக தமது நிர்வாக பணியை தொடங்கிய ஜெயலலிதா அதில் மிகப்பெரும் வெற்றி கண்டார். எப்போதுமே மிகவும் ஏழை எளிய மக்களுக்கு பயன் தரும் திட்டங்களுக்கு மக்களின் முதல்வர் ஜெயலலிதா பெருமளவில் நிதி ஒதுக்கீடு செய்து வந்துள்ளார். உதாரணமாக கடந்த 4 ஆண்டுகளில் ஜெயலலிதா பல்வேறு சிறப்புத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தினார். குறிப்பாக பணவீக்கம் காரணமாக எழை மக்கள் பாதிப்படையாமல் பாதுகாக்க அத்தியாவசியப் பொருட்களுக்கு அதிக மானியங்கள் அளித்து குறைந்த விலையில் கிடைக்க நடவடிக்கை மேற்கொண்டார்.
அவர் தொடங்கிய அம்மா உணவகங்களில் இட்லி, சாம்பார் மற்றும் சாத வகைகள் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு ஒரு ரூபாயிலிருந்து 5 ரூபாய்க்குள் கிடைக்க வழி செய்தார். இதனை தொடர்ந்து அம்மா குடிநீர் திட்டத்தை தொடங்கி சுத்தமான பாதுகாக்கப்பட்ட குடிநீரை வழங்கினார். மேலும் நடுத்தர மக்களும் மிக பின்தங்கிய மக்களும் பயனடையும் வகையில் குறைந்த விலையில் அம்மா சிமெண்ட் கிடைக்க வழிவகை செய்தார்.
குறிப்பிட்ட அளவிலான சிமெண்ட் மூட்டைகள் மூட்டை ஒன்றுக்கு ரூ 190 கிடைக்கவும் அதன் மூலம் அவர்களின் கனவு இல்லங்களை கட்டிக்கொள்ளவும் ஜெயலலிதா வழிவகை செய்தார். தமிழக மக்களுக்கு உணவு குடிநீர் மட்டுமில்லாமல் குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்கவும் அம்மா மருந்தகங்களை தொடங்கினார். இதன் மூலம் விலை உயர்ந்த மருந்துகள் கூட மானிய விலையில் ஏழை எளிய மக்களுக்கு கிடைத்தன. ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு குறைந்த விலையில் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்வதுடன் தனது பணியை நிறுத்திக்கொள்ளவில்லை.
மாநில அரசில் காலியாக இருந்த பணியிடங்களில் விரைந்து நிரப்ப நடவடிக்கை மேற்கொண்டார். உதாரணமாக பள்ளிக்கூடங்களில் 70 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டார்கள். இந்த ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப பொதுவாக எந்த அரசும் அக்கறை செலுத்தாதது மட்டுமல்ல. அதற்கான நிதியையும் ஒதுக்கவில்லை. ஆனால் இதில் தீவிர நடவடிக்கை எடுத்ததோடு அதை நிறைவேற்றியும் காட்டினார் ஜெயலலிதா. முந்தைய ஆட்சியாளர்களால் புறக்கணிக்கப்பட்டிருந்த உள்கட்டமைப்பு வசதிகளான சாலைகள், மின் உற்பத்தி திட்டங்கள் பாதாள சாக்கடை திட்டங்கள் பள்ளிக்கூட கட்டிடங்கள் ஆறுகள் இணைக்கும் திட்டங்கள் , பாசன கால்வாய் திட்டங்கள் ஆகியவற்றுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்தார்.
ஜெயலலிதாவின் தொலைநோக்கு திட்டம் 2023ன் கீழ் 15 லட்சம் கோடி ரூபாய் மூதலீடு தமிழகத்திற்கு கிடைத்திருக்கிறது. நாட்டில் உற்பத்தியாகும் வாகன உற்பத்தியில் 25 சதவீதம் தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் நிலை எட்டப்பட்டுள்ளது. குறிப்பாக கார்களை தயாரிக்கும் சர்வதேச நிறுவனங்களான நிசான் , ஹூண்டாய் பி.எம்.டபிள்யூ போன்ற நிறுவனங்கள் தமிழகத்தில் உற்பத்தி மையங்களை நிறுவி வெற்றிகரமாக உற்பத்தி செய்து வருகின்றன. நாட்டின் ஒட்டுமொத்த எல்க்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தியில் 18 சதவீதம் தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
பிரபல சர்வதேச நிறுவனங்களான டெல், சாம்சங், பாக்ஸ்கான் போன்ற நிறுவனங்கள் தமிழ்நாட்டில் வெற்றிகரமாக எல்க்ட்ரானிக் பொருட்களை உற்பத்தி செய்து வருகின்றன. இது போன்ற தொழில் உற்பத்திக்கு மிகவும் சாதகமான சூழ்நிலையை தமிழகத்தில் ஏற்படுத்தி கொடுத்ததால் 2010-11ம் ஆண்டில் 7 ஆயிரத்து 440 கோடி ரூபாயாக இருந்த நேரடி அந்நிய முதலீடு, கடந்த ஆண்டு 17 ஆயிரத்து 360 கோடியாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஜெயலலிதாவுக்கு உள்ள சிறந்த செல்வாக்கு காரணமாகவும் பொருளாதாரத்தில் மிகச் சிறந்த மாநிலமாக தமிழகத்தை கொண்டு வருவதில் அவர் எடுத்த முயற்சிகள் காரணமாகவும் உள்நாட்டு உற்பத்தியில் 8.25 சதவீதம் வளர்ச்சியடைந்து சாதனை படைத்தது.
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வேகமாக வளர்ச்சி பெற்ற மாநிலமாகவும் தமிழகத்தை ஜெயலலிதா உயர்த்தியுள்ளார். ஜெயலலிதாவின் சிறந்த நிர்வாக திறமை மற்றும் அற்புதமான நிதி மேலாண்மை கொள்கையால் கடந்த 4 ஆண்டுகளில் வருவாய் பற்றாக்குறை இடைவெளி முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது. அவர் மூன்றாவது முறையாக பொறுப்பேற்று கொண்டபோது 3 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த பற்றாக்குறை முற்றிலுமாக நீக்கப்பட்டு, கடந்த ஆண்டு ரூ. 600 கோடியாக உபரி வருமானத்தை ஈட்டியுள்ளது. வியக்கத்தக்க வகையில் சமூக நலத்திட்டங்களுக்கு மிகப்பெரும் அளவில் நிதி ஒதுக்கீடு செய்த போதிலும் வருவாய் ஈட்டுவதில் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் திகழ்கிறது.
ஜெயலலிதாவின் சிறப்பான பொருளாதார நடவடிக்கைகளால் அதிமுக ஆட்சியில் மொத்த வருவாய் ஈட்டுதலில் 100 சதவீதம் உயர்ந்து தமிழ்நாடு மிகச்சிறந்த மாநிலமாக திகழ்கிறது. ஜெயலலிதாவின் பொருளாதார சிந்தனை மற்றும் அதற்கு தரும் ஊக்கம் அரசியல் மற்றும் வளர்ச்சியில் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை அளித்திருக்கிறது. மக்களின் முதல்வர் ஜெயலலிதா அற்புதமான திறமை அறிவாற்றல் படைத்தவர். சந்தேகத்திற்கு இடமின்றி மக்களின் முதல்வர் மீது விசுவாசமும் நம்பிக்கையும் வைத்துள்ள தொண்டர்களால் ஜெயலலிதா மிகச் சிறந்த வெற்றியை பெற்றுள்ளார்.
நல்லாட்சியையும், சிறந்த பொருளாதாரத்தையும் தரக்கூடிய ஒரு மாபெரும் தலைவராகவும் அவர் உருவெடுத்துள்ளார். அரசியல் எதிரிகளால் பின்னப்பட்ட சூழ்ச்சி வலையில் சிக்கியிருந்த மக்களின் முதல்வர் ஜெயலலிதா, வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு நிரபராதி என்று கர்நாடக உயர்நீதிமன்றத்தால் உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து தற்போது மாநிலத்தின் மிகப்பெரிய சக்தியாகவும் உருவெடுத்துள்ளார். பிரதமர் மோடியை போலவே ஜெயலலிதாவும் மக்களை கவரும் வகையில் பேசக் கூடிய பேச்சாற்றலையும் பெற்றுள்ளார். அவர் ஒரு சக்திவாய்ந்த தலைவராவார். மாநில எல்லைகளையும் கடந்து அவர் மக்கள் செல்வாக்கையும், அங்கீகாரத்தையும் பெறுவார் என்பது மட்டும் உறுதி. இவ்வாறு அவர் அந்த கட்டுரையில் எழுதியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 17 sec ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி6 days 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 3 days ago |
-
இலங்கை: கார் பந்தய விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
23 Apr 2024கொழும்பு, இலங்கையின் ஊவா மாகாணத்தில் நடைபெற்ற கார் பந்தயத்தில் பங்கேற்ற கார் ஒன்று பார்வயாளர்களிடையே பாய்ந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.
-
புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், அகவிலைப்படி உயர்வு
23 Apr 2024புதுச்சேரி, யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், கிராஜூவிட்டி, வீட்டு வாடகை படி, குழந்தைகளின் கல்வி உதவித்தொகை, சீருடை படி ஆகியவை உயர்த்தப்பட
-
கூவாகம் திருவிழா: மிஸ் திருநங்கை 2024 பட்டத்தை வென்ற ஈரோட்டை சேர்ந்த ரியா
23 Apr 2024கூவாகம், கூவாகத்தில் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி மிஸ் கூவாகம் போட்டி நடந்தது.
-
பார்லி. தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 2-ம் கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவு: இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரம்
23 Apr 2024டெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
-
தமிழ்நாட்டில் குமரி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பறக்கும் படை சோதனை தொடரும்: தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு தகவல்
23 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மட்டும் 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை சோதனை தொடரும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
-
சிறை தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது: முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் உடனே சரணடைய சென்னை ஐகோர்ட் உத்தரவு
23 Apr 2024சென்னை, பெணுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் உடனடியாக சரணடைய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
வட தமிழக உள் மாவட்டங்களுக்கு இன்றும் வெப்ப அலை எச்சரிக்கை
23 Apr 2024சென்னை, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
சட்டவிரோதமாக நுழைந்தவர்களை நாடு கடத்தும் புதிய மசோதா இங்கிலாந்தில் நிறைவேற்றம்
23 Apr 2024லண்டன், சட்டவிரோதமாக நுழைந்தவர்களை ருவாண்டாவுக்கு நாடு கடத்தும் புதிய மசோதா நிறைவேற்றம் இங்கிலாந்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
50 லட்சம் பார்வைகளை நெருங்கும் நடிகர் ரஜினிகாந்தின் கூலி பட டீசர்
23 Apr 2024சென்னை, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் டீசர் வெளியான 17 மணி நேரத்தில் 47 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.
-
குலுங்கியது மதுரை மாநகர்: பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கர் திரண்டு சாமி தரிசனம்
23 Apr 2024மதுரை, சித்ரா பவுர்ணமியாம் நேற்று பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
-
67 மருந்துகள் தரமற்றவை: மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்க பரிசோதனையில் 67 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
-
5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்
23 Apr 2024இஸ்லாமாபாத், 5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்.
-
அதிகரித்த சர்க்கரை அளவு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது
23 Apr 2024புதுடெல்லி, அதிகரித்த சர்க்கரை அளவை அடுத்து சிறையில் இருக்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது.
-
மீண்டும் நிலநடுக்கம்: தைவானில் அடுத்தடுத்து பல முறை அதிர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி
23 Apr 2024தைபே, தைவானின் கிழக்குப் பகுதியான ஹுவாலினில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
மலேசியாவில் ஒத்திகையின் போது பயங்கரம்: ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழப்பு
23 Apr 2024கோலாலம்பூர், மலேசியாவில் ஒத்திகையின் போது இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் கடற்படை வீரர்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்
-
சமுதாயத்தை தழைக்க செய்யும் கொடை புத்தகங்கள்: உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
23 Apr 2024சென்னை, ‘புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை’ என உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள
-
பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது: பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
23 Apr 2024புதுடெல்லி, பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது என்று பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
-
அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவின் கோர்ட் காவல் மேலும் நீட்டிப்பு
23 Apr 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பிஆர்எஸ் கட்சி எம்.பி., கவிதாவின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
சஞ்சு சாம்சனுக்கு ஆதரவு
23 Apr 2024ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி பெற்றது.
-
க்யூட், நெட் தேர்வு மதிப்பெண் சமநிலைப்படுத்துதல் இருக்காது: யு.ஜி.சி. தலைவர் ஜகதீஷ் குமார் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, க்யூட், நெட் தேர்வுகளில் ஒவ்வொரு பிரிவிலும் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் சமநிலைப்படுத்தும் நடைமுறை இனி இருக்காது’ என்று பல்கலைக்கழக மானியக் குழு (யு
-
காதலியை கொன்ற வழக்கு: சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டுகள் சிறை
23 Apr 2024சிங்கப்பூர், கள்ளக்காதலியை அடித்துக் கொன்ற வழக்கில் சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி?: 9 மாவட்டச் செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
23 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி? என்பது குறித்து 9 மாவட்டச் செயலாளர்களுடன் அ.தி.மு.க.
-
சட்டவிரோதமாக இங்கிலாந்தில் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
23 Apr 2024பாரிஸ், பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
பருப்பு, மசாலா உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை கடும் உயர்வு
23 Apr 2024சென்னை, கடந்த மாதத்தைவிட எண்ணெய், மளிகைப் பொருட்களின் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.250 வரை உயர்ந்துள்ளது. இதேபோல் பூண்டு விலையும் அதிகரித்துள்ளது.
-
மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை : ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
23 Apr 2024சென்னை, மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.