முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் மீண்டும் அனல்காற்று

செவ்வாய்க்கிழமை, 19 மே 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை: கோடை மழை காரணமாக காணாமல் போயிருந்த கத்திரி வெயில் மீண்டும் சென்னை நகரில் தலைகாட்டியதால் அனல் காற்று வீசுகிறது. கடந்த 4-ந் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கியது. கடுமையான வெப்பம் இருக்கும் என்று மக்கள் அஞ்சிக் கொண்டிருந்த வேளையில் வங்கக் கடலில் உருவான மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உட்பட தமிழகம் முழுவதும் நல்ல மழை பெய்தது.

இதன் காரணமாக  சென்னை உட்பட அனைத்து பகுதிகளிலும் வெப்பம் தணிந்து குளுமையாக இருந்தது. மேலடுக்கு சுழற்சி லட்சத்தீவு அருகே நீடித்திருப்பதால் தமிழ்நாட்டின் தென் பகுதியில் இன்னும் பலத்த மழை கொட்டி வருகிறது. ஏரிகள் நிரம்பி வருகின்றன.  நேற்று வரை குளுமையாக இருந்த சென்னையில் இன்று மீண்டும் தகிக்க ஆரம்பித்து விட்டது. காலையில் இருந்தே வெப்பம் கிடுகிடுவென உயர்ந்தது. பகல் 1 மணியளவில் 96.8 டிகிரியாக வெப்பம் பதிவானது. இருசக்கர வாகனங்கள் செல்பவர்கள் மிகவும் அவதிக்கு ஆளானார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து