முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முழுக் கொள்ளளவை எட்டியது வீராணம் ஏரி

புதன்கிழமை, 20 மே 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை, கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரி, முழுக் கொள்ளளவை எட்டி, கடல் போலக் காட்சியளிக்கிறது.

கோடைக்  காலத்தை முன்னிட்டு, வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு தட்டுப்பாடின்றி  குடிநீர் கொண்டு செல்லும் வகையில், மேட்டூரில் இருந்து நீர் திறக்கப்பட்டு,  கல்லணை வழியாக காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள கீழணைக்கு நீர் கொண்டு  வரப்படுகிறது.

இதனால், கீழணை முழுக் கொள்ளளவான 9 அடியை எட்டியது.  இதையடுத்து கீழணையில் இருந்து வடவாறு வழியாக விநாடிக்கு 2,500 கனஅடி வீதம்  வீராணம் ஏரிக்கு தண்ணீர் அனுப்பப்பட்டுள்ளது.

இதனால், வீராணம் ஏரி  முழுக் கொள்ளளவான 47.50 அடி நீர்மட்டத்துடன் கடல் போல காட்சியளிக்கிறது.  ஏரியில் இருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு விநாடிக்கு 66 கனஅடி வீதம்  தண்ணீர் அனுப்பப்படுகிறது.

குறுவை சாகுபடியின்போது ஏரியில் நீரை நிரப்பி, பாசனத்துக்கு வழங்கியிருந்தால் பயன்பட்டிருக்கும். ஆனால்,  பொதுப்பணித் துறையினர் தற்போது சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்லும்  நோக்கில் ஏரியில் நீரை நிரப்பி வைத்துள்ளனர். ஏரியில் முழுக் கொள்ளளவுக்கு  நீர் உள்ளதால் பாசனத்துக்கான நீர் தற்போது தேவையில்லை என விவசாயிகள்  தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து