முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்னாப்டீல் நிறுவனம் புதுச்சேரி அரசுடன் ஒப்பந்தம்

புதன்கிழமை, 20 மே 2015      வர்த்தகம்
Image Unavailable

சென்னை, இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் சந்தையாகஸ்னாப்டீல் நிறுவனம் திகழ்கிறது.இந்நிறுவனம் அதன் ‘ஸ்னாப்டீல்’இணையத்தின் வாயிலாக புதுச்சேரி கைவினை கலைஞர்களின்தயாரிப்புகளை ஏராளமான வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்துவதற்கான தொழில்நுட்ப மற்றும் செயல்பாட்டு உதவியை அளிப்பதற்காக புதுச்சேரி அரசின் புதுச்சேரி மாநில கூட்டுறவு கைத்தறி மற்றும் கைவினைப் பொருள்கள் இணையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

தோல் பொருள்கள், ஜவுளி, கைவினைப்பொருள்கள்,கையால் தயாரிக்கப்படும் காகிதம், மர வேலைப்பாட்டு பொருள்கள், களிமண் மற்றும் டெர்ரகோட்டா, நகைகள், சணல் மற்றும் உலோக வேலைப்பாட்டு பொருள்கள், மெழுகு வர்த்திகள், ஊதுபத்திகள் போன்ற கைவினைப் பொருள்கள் புதுச்சேரி கலாச்சாரத்தை பிரதிபலிப்பதில் முக்கிய அங்கம் வகிக்கின்றன.

புதுச்சேரியின் பல்வேறு வகையான மற்றும் உயர்வகை கைவினைப் பொருள்கள் உள்ளூர் மற்றும் சர்வதேச வாடிக்கையாளர்களின் வாழ்க்கை முறையில் அழகைக் கூட்டி புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். இந்த தயாரிப்புகள், ஸ்னாப்டீலில் இவ்வாண்டு மே மாதம் முதல் கிடைக்கும். இந்த ஒப்பந்தத்தின் ஓர் அங்கமாக, ஸ்னாப்டீல் கைவினை கலைஞர்களுக்கு பொருள்களை பட்டியலிட்டுப் புதுமையான முறையில் விற்பனை செய்வதற்கு உதவி செய்யும். மேலும் புதுச்சேரியின் தனித்தன்மை வாய்ந்த ஏராளமான வகையான கைவினைப் பொருள்களிலிருந்து விருப்பமானவற்றை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வாயிலாக, இது போன்ற பிரச்சினைகள் சிலவற்றிற்கு தீர்வு கிடைக்கும். திறமைமற்றும் செலவினத்திற்கு உரிய பலன் தரக்கூடிய ஒரு வழிமுறையை ஸ்னாப்டீல் உருவாக்கும்.இதன் வாயிலாக, வாங்குபவர்களும், விற்பனையாளர்களும் எந்த வித இடைத்தரகர்களும் இன்றி நேரடியாக வர்த்தகம் புரியலாம்.

இந்த ஒப்பந்தம் குறித்து ஸ்னாப்டீல்டாட் காமின் (Snapdeal.com) துணைத்தலைவர்(சந்தை மேம்பாடு) விஷால் சதாகூறுகையில், “தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வியாபாரத்தை மேம்படுத்துதல் மற்றும் நேரடி சந்தைபடுத்துதல் வாயிலாக சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்களின் வளர்ச்சிக்கு உதவுவதை லட்சியமாகக் கொண்டு நாங்கள் செயல்படுகிறோம். குறிப்பாக புதுச்சேரி கைவினை கலைஞர்களின் தயாரிப்புகளை நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்ய வாய்ப்பு அளிக்கிறோம்.இதன் வாயிலாக அதிகவேலை வாய்ப்பும் உருவாகும். இந்த ஒப்பந்தம் இரு தரப்பினரும் பயன்பெறும் வகையில் இருக்கும்.மேலும் கைவினைப்பொருள் துறையில் ஈடுபடும் அனைவருக்கும் வளர்ச்சியை ஏற்படுத்தும். இதன் மூலம் எங்களது வர்த்தக சிறப்பை அதிகரிக்கும்” என்று தெரிவித்தார்.

இந்த முயற்சி குறித்து ஆர்டிசனட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வசந்த குமார் கூறுகையில், “எங்களது பிராண்டு ஏற்கனவே சர்வதேச அளவில் பிரபலமானது. இந்த முயற்சியின் வாயிலாக நாடு முழுவதிலும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு புதுச்சேரியின் தனித்தன்மை வாய்ந்த கைவினைப் பொருள்களை வாங்கும் வாய்ப்பு கிடைக்கும். கைவினை கலைஞர்களால் சந்தையில் நல்ல அளவில் ஊடுறுவி பொருள்களின் விற்பனையை அதிகரிக்க முடியும்” என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து