முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தோட்டக்கலை அலுவலர் பணிக்கு ஜூன் 1 ந்தேதி நேர்முகத்தேர்வு

புதன்கிழமை, 20 மே 2015      தமிழகம்

சென்னை, தோட்டக்கலை அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு எழுதியவர்களுக்கு  வரும் 1 ந்தேதி முதல் நேர்முகத்தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

2013-2014-ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு வேளாண்மைப் பணியில் அடங்கிய தோட்டக்கலை அலுவலர் பதவியில் உள்ள 183 காலிப்பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் அண்மையில் வழங்கப்பட்டது. இதற்கான எழுத்துத் தேர்வு கடந்த மார்ச் 16 ந்தேதி நடைபெற்றது.  இதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு 605 விண்ணப்பதாரர்களுக்கு 30.03.2015 முதல் 01.04.2015 வரை, 06.04.2015 மற்றும் 07.04.2015 ஆகிய  நாட்களில் நடைபெற்றது. மேற்படி சான்றிதழ் சரிபார்ப்பிற்கு பின் 361 விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்பட்டுள்ளனர். நேர்முகத் தேர்வு எதிர்வரும் 01.06.2015 முதல் 04.06.2015 வரை சென்னை பிரேசர் பாலச் சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது. விண்ணப்பதாரர்கள், மேற்படி அழைப்புக் கடிதத்தை தேர்வாணைய இணைய தளத்திலிருந்தும் (www.tnpsc.gov.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து