எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மக்களின் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட இடர்பாட்டை தாங்கிக்கொள்ள முடியாமல் அண்மையில் மரணமடைந்த 7 பேரின் குடும்பங்களுக்கு ஜெயலலிதா சார்பில் தலா 3 லட்சம் வீதம் 21 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன், அமைச்சர்கள் இத்தொகையை சம்பந்தப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கினர். நிதியை பெற்றுக்கொண்டவர்கள், மக்களின் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.
இது குறித்து அ.திமு.க தலைமைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர்ஜெயலலிதாவுக்கு ஏற்பட்டிருந்த இடர்ப்பாட்டைத் தாங்கிக் கொள்ள இயலாமல், அண்மையில் மரணமடைந்த 7 பேர்களின் குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் வீதம் 21 லட்சம் ரூபாய் குடும்ப நல நிதியுதவி நேற்று வழங்கப்பட்டது.
இதுவரை 251 பேர்களின் குடும்பங்களுக்கு 7 கோடியே 53 லட்சம் ரூபாயும்; 4 பேர்களின் மருத்துவ சிகிச்சைக்கு 2 லட்சம் ரூபாயும்; ஆக மொத்தம் ரூ 7 கோடியே 55 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைமைக்கு ஏற்பட்டிருந்த துயரத்தைத் தாங்கிக் கொள்ள இயலாமல் தீக்குளித்தல், தூக்கிடுதல், விஷம் அருந்துதல் உள்ளிட்ட பல்வேறு வகைகளில் மரணமடைந்த 244 பேர்களின் குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் ரூபாயும் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளும் செயல்களில் ஈடுபட்ட 4 பேர்களின் மருத்துவ சிகிச்சைக்கு தலா 50,000/- ரூபாயும் வழங்கப்படும் என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்தைத் தொடர்ந்து, மொத்தம் 7 கோடியே 34 லட்சம் ரூபாய் குடும்ப நல நிதியுதவி வழங்கப்பட்டது.
இந்நிலையில், அண்மையில் வட சென்னை தெற்கு, வேலூர் கிழக்கு, திருப்பூர் புறநகர், புதுக்கோட்டை, மதுரை புறநகர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 7 கழக உடன்பிறப்புகள் மரணமடைந்த செய்தியை அறிந்த அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மிகுந்த மன
வேதனை அடைந்ததோடு, மரணமடைந்த கழக உடன்பிறப்புகளின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்து, குடும்ப நல நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்
அதன்படி, கழகப் பொதுச் செயலாளர் ஜெயலலிதா சார்பாக நேற்று
1) கழக அவைத் தலைவர் . இ. மதுசூதனன் அமைச்சர்கள் வளர்மதி, எஸ். கோகுல இந்திரா, மாணவர் அணிச் செயலாளர் திரு. எஸ்.ஆர். விஜயகுமார், எம்.பி., வட சென்னை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் நா. பாலகங்கா ஆகியோர் , அரசியல் எதிரிகள் பரப்பிய வதந்திகளைக் கேட்டு மனம் வெதும்பி ரயில் முன் பாய்ந்து தன் உயிரை மாய்த்துக் கொண்ட வட சென்னை தெற்கு மாவட்டம், எழும்பூர் பகுதி 77-ஆவது தெற்கு வட்டக் கழக மேலமைப்புப் பிரதிநிதி . ராஜா இல்லத்திற்கு நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து, அவருடைய மனைவி திருமதி விஜயலட்சுமியிடம் குடும்ப நல நிதியுதவியாக 3,00,000/- ரூபாய்க்கான வரைவோலையை வழங்கினார்.
2) அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளரும், தமிழ் நாடு வக்ஃபு வாரியத் தலைவருமான . அ. தமிழ்மகன் உசேன், கன்னியாகுமரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பச்சைமால், நாகர்கோவில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நாஞ்சில் முருகேசன் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகள்; நம் அரசியல் எதிரிகள் பரப்பிய வதந்திகளைக் கேட்டு மனம் வெதும்பி விஷம் அருந்தி தன் உயிரை மாடீநுத்துக் கொண்ட நாகர்கோவில் நகர 21-ஆவது வார்டைச் சேர்ந்த . சலீம் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து, அவருடைய மகன் திரு. சரபுதீனிடம் குடும்ப நல நிதியுதவியாக 3,00,000/- ரூபாய்க்கான வரைவோலையை வழங்கினார்கள்.
3) அதிமுக தேர்தல் பிரிவு செயலாளரும் சட்டபேரவைத்துணைத்தலைவர் . பொள்ளாச்சி ஏ. ஜெயராமன், தமிழ் நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத் தலைவர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன் மற்றும் மாவட்டத்தைச் சேர்ந்த கழக நிர்வாகிகள்; கழகப் பணியில் ஈடுபட்டிருந்த போது மரணமடைந்த சங்கராமநல்லூர் பேரூராட்சி 8-ஆவது வார்டைச் சேர்ந்த பத்மாவதி இல்லத்திற்கு நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து, அவருடைய கணவர் திரு. பெருமாள்சாமியிடம் குடும்ப நல நிதியுதவியாக 3,00,000/- ரூபாய்க்கான வரைவோலையை வழங்கினார்கள்.
4) மதுரை மாநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான செல்லூர் கே. ராஜு, மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் ம. முத்துராமலிங்கம், எம்.எல்.ஏ., மதுரை மாநகராட்சி மேயர். ராஜன் செல்லப்பா மற்றும் மாவட்டத்தைச் சேர்ந்த கழக நிர்வாகிகள், அரசியல் எதிரிகள் பரப்பிய பொடீநுச் செய்திகளைக் கேட்டு மன உளைச்சல் காரணமாக மாரடைப்பால் மரணமடைந்த மதுரை புறநகர் மாவட்டம், அவனியாபுரம் பகுதி, 55-ஆவது வட்ட ஜெ ஜெயலலிதா பேரவைச் செயலாளர் லெனின் பாண்டி, தீக்குளித்து மரணமடைந்த இவருடைய மனைவி அழகிமீனா ஆகியோரது இல்லத்திற்கு நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து, குடும்ப நல நிதியுதவியாக தலா 3,00,000/- ரூபாய் வீதம் 6,00,000/- ரூபாய்க்கான வரைவோலையை அவர்களுடைய பிள்ளைகளிடம் வழங்கினார்கள்.
5) வேலூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமான தி. வீரமணி, வேலூர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் . பார்த்திபன், வேலூர் மாநகராட்சி மேயர் கார்த்தியாயிணி மற்றும் மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகள்; கழகப் பணியில் ஈடுபட்டிருந்த போது மரணமடைந்த காட்பாடி வடக்கு பகுதி, 3-ஆவது வட்ட அதிமுக மேலமைப்புப் பிரதிநிதி கனகவிஸ்வலிங்கம் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து, அவருடைய மனைவி மோகனாவிடம் குடும்ப நல நிதியுதவியாக 3,00,000/- ரூபாய்க்கான வரைவோலையை வழங்கினார்கள்.
6) புதுக்கோட்டை மாவட்ட அதிமுக செயலாளரும், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சருமான டாக்டர் சி. விஜயபாஸ்கர் மற்றும் மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகள்; கழகப் பணியில் ஈடுபட்டிருந்த போது மரணமடைந்த அன்னவாசல் ஒன்றியம், கோத்திராப்பட்டி ஊராட்சி, மலைக்குடிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஏ. செல்வத்தின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து, அவருடைய மனைவி பானுமதியிடம் குடும்ப நல நிதியுதவியாக 3,00,000/- ரூபாய்க்கான வரைவோலையை வழங்கினார்கள்.
இன்று மட்டும், அண்மையில் மரணமடைந்த 7 பேர்களின் குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் வீதம் 21 லட்சம் ரூபாய் குடும்ப நல நிதியுதவி வழங்கப்பட்டது.
இதுவரை, 251 பேர்களின் குடும்பங்களுக்கு 7 கோடியே 53 லட்சம் ரூபாயும்; 4 பேர்களின் மருத்துவ சிகிச்சைக்கு 2 லட்சம் ரூபாயும்; ஆக மொத்தம் 7 கோடியே 55 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
நிர்வாகிகளை தங்களுடைய இல்லங்களுக்கே அனுப்பி வைத்து நிதியுதவியினை வழங்கச் செய்த, ஏழை, எளிய மக்களின் கண்கண்ட காவல் தெய்வம், தமிழக மக்களின் ஒரே நம்பிக்கை நட்சத்திரம், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு , நிதியுதவியினைப் பெற்றுக் கொண்டவர்கள் தங்களுடைய குடும்பங்களின் சார்பில் மனமார்ந்த நன்றியினை கண்ணீர் மல்க தெரிவித்துக் கொண்டனர். மேற்கண்டவாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது..
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்23 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 42 min ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 18 hours ago |
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
செல்போன் டவரில் ஏறி தமிழக விவசாயிகள் திடீர் போராட்டம் : தலைநகர் டெல்லியில் பரபரப்பு
24 Apr 2024புதுடெல்லி, டெல்லி ஜந்தர் மந்தரில் செல்போன் டவர், மரத்தின் மீது ஏறி தமிழ்நாட்டை சார்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
வண்டியூர் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்த கள்ளழகர்: ராமராயர் மண்டகப்படியில் விடிய, விடிய தசாவதாரம்
24 Apr 2024மதுரை, வண்டியூர் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் அங்கு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார்.
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்: 3-வது முறையாக விண்வெளிக்கு செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
24 Apr 2024வாஷிங்டன், பூமி உள்ளிட்ட பிற கிரகங்களை ஆய்வு செய்வதற்காக ரஷியா, அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்தை அமைத்துள்ளன.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.