முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

யமுனை எக்ஸ்பிரஸ் சாலையில் மிராஜ் விமானம் தரையிறங்கியது

வியாழக்கிழமை, 21 மே 2015      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி:  அவசர காலத்தில் சாலையில் போர்விமானத்தை தரையிறக்குவது தொடர்பாக நேற்று சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனையின்போது விமானப்படையின் மிராஜ் 2000 விமானம் யமுனை எக்ஸ்பிரஸ் பாதையில் தரையிறங்கியது. இந்த சோதனை மதுரா அருகே நடைபெற்றது.

மிராஜ் விமானம் அதிகாலை 6.40மணிக்கு சாலையில் தரையிறங்கியது என இந்திய விமானப்படையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.இதுபோன்ற சோதனைகள் பல்வேறு சாலைகளிலும் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.அவசர காலத்தில் போர்விமானங்களை சாலைகளில் தரையிறக்குவது தொடர்பாக இந்திய விமானப்படை பரிசீலனை செய்து வருகிறது .இதன் அடிப்படையில் விமானம் யமுனை சாலையில் தரையிறக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து