முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்ட்ரல் வழியாக பாட்னா - பெங்களூர் பிரீமியம் ரயில்

வியாழக்கிழமை, 21 மே 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை - பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காக சென்னை சென்ட்ரல் வழியாக பாட்னா-பெங்களூர் இடையே பீரிமியம் ரயில் இயக்கப்படுகிறது. இதன்படி, (நேற்றும் மே 21), 28, ஜூன் 4, 11,18 மற்றும் 25 ஆகிய நாட்களிலும் வியாழக்கிழமைகளில் பாட்னாவில் இருந்து இரவு 11.30 மணிக்கு புறப்படும் பிரீமியம் ரயில் (வண்டி எண்.22353) சனிக்கிழமை மதியம் 1.30 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடைந்து.

அன்றைய தினம் இரவு 6.55 மணிக்கு பெங்களூர் சென்றடையும். இதேபோல், மே 24, 31, ஜூன் 7,14, 21, 28 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் பெங்களூருவில் இருந்து பிற்பகல் 3.30 மணிக்கு புறப்படும் பிரீமியம் (வண்டிஎண். 22354) ரயில் அன்றைய தினம் இரவு 9.10 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடைந்து செவ்வாய்க்கிழமை காலை 9.45 மணிக்கு பாட்னா சென்றடையும். இந்த ரயில் சோக்கி, ஜபல்பூர், நாக்பூர், விஜயவாடா மற்றும் சென்னை சென்ட்ரல் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இத்தகவல், தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து